உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!
Jan 14, 2026, 05:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

Murugesan M by Murugesan M
Sep 19, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் பழமையான 3D வரைபடத்தைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்…

அடிலெய்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 13 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த 3டி வரைப்படத்தைச் சமீபத்தில் கண்டறிய, அது தொல்லியல் துறையினர் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

புகழ்பெற்ற செகோக்னோல் பாறைகளுக்குள் அமைந்துள்ள இந்த 3டி புகைப்படம் பாரிஸ் படுகையைக் குறிப்பதாக அமைந்துள்ளது. தங்களது அன்றாட வாழ்க்கைக்கு நீரோட்டத்தின் திசை முக்கியம் எனக் கருதிய கற்கால மக்கள் , 3டி வரைபடத்தை உருவாக்கி இருக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

செகோக்னோல் பாறைகளுக்குள் அமைந்துள்ள இந்த 3டி வரைபடம், பாலியோலிதிக் ஸ்டைலில் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள், 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பாலியோலிதிக் மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிப்பதாக இந்த வரைபடம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் பொறியியல் திறன் படைத்தவர்களாக வாழ்ந்துள்ளனர் என்றும் அவர்கள் அடித்து கூறுகின்றனர். இன்றைய காலத்து 3டி மேப்கள் போல், தத்ரூபமான தகவல்கள் இடம்பெறாவிட்டாலும், நீரோட்டம் எங்கிருந்து தொடங்குகிறது, எங்கு சேர்கிறது என்பது உள்ளிட்ட விவரங்கள் பண்டைகால வரைபடத்தில் இடம்பெற்றுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாலியோலிதிக் மக்கள் நேரம், தூரம் ஆகியவற்றைக் கணக்கில் கொள்ளாமல், திசைகளை அடிப்படையாகக் கொண்டு தங்களது வாழ்வியலை முன்னெடுத்துள்ளனர் என்றும் கருத்து கூறுகின்றனர்.

இதற்கு முன்னர் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய 3டி வரைபடமே பழமை வாய்ந்ததாகக் கருதப்பட்டது. BRONZE AGE எனப்படும் உலோகக் காலத்தில் இருந்தே 3டி கான்செப்ட் தோன்றியதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அடிலெய்டு பல்கலை ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு, அதனைச் சுக்கு நூறாக உடைத்துள்ளது.

கற்கால மக்களும் முப்பரிமாணம் குறித்து அறிந்து வைத்தது உறுதியாகி உள்ளதால், தொல்லியல் துறையினருக்கு அது மேலும் ஆர்வமூட்டும் செய்தியாக அமைந்துள்ளது. உலோகக் காலங்களில் மக்களின் வாழ்வியல் குறித்து ஆராயப்படுவது நிறுத்தப்பட்டுக் கற்கால மக்களை நோக்கி தொல்லியல் ஆராய்ச்சியாளர்களை நகர்த்தியுள்ளது.

Tags: World's oldest 3D map: Researchers discover 13 thousands -year-old drawing!உலகின் பழமையான 3D வரைபடம்ஆராய்ச்சியாளர்கள்அடிலெய்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்? – பாக். – சவூதி பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்!

Next Post

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் – திரையுலகம் கண்ணீர் அஞ்சலி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies