இஸ்ரேலில் தட்டம்மை பரவல் அதிகரிப்பால் பாதிப்புகளின் எண்ணிக்கை ஆயிரத்து 251 ஆக அதிகரித்துள்ளது.
இஸ்ரேலில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தட்டம்மை பரவல் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், தேசியளவில் அந்நாட்டு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் ஒரு லட்சத்து 42 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
இருப்பினும், இஸ்ரேலில் புதியதாக 481 தட்டம்மை பாதிப்புகள் உறுதியாகி உள்ளன. இதன்மூலம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பதிவான பாதிப்புகளின் எண்ணிக்கை ஆயிரத்து 251 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.