1,350 டன் யூரியா மூட்டைகளை லாரிகளில் ஏற்றவிடாமல் இடையூறு செய்யும் திமுக வட்டச்செயலாளர் - அண்ணாமலை கண்டனம்!
Nov 4, 2025, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

1,350 டன் யூரியா மூட்டைகளை லாரிகளில் ஏற்றவிடாமல் இடையூறு செய்யும் திமுக வட்டச்செயலாளர் – அண்ணாமலை கண்டனம்!

Web Desk by Web Desk
Sep 19, 2025, 10:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய 1,350 டன் யூரியா மூட்டைகளை லாரிகளில் ஏற்றவிடாமல் திமுக வட்டச் செயலாளர் தடுப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகத்தின் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்காக, 1,350 டன் யூரியா, குஜராத்திலிருந்து சரக்கு ரயிலில் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த யூரியா, மதுரை கூடல்புதூர் பகுதியில் உள்ள குட்ஷெட்டிற்கு வந்தடைந்த நிலையில், திமுக வட்டச் செயலாளராக உள்ள செந்தில் என்பவர், லோடுமேன்களை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு யூரியா மூட்டைகளை லாரிகளில் ஏற்றவிடாமல் தடுத்து வைத்திருக்கிறார்.

மாலை 6 மணிக்கு முன்பாக லோடு ஏற்றினால், ரூபாய் 100 கூலியும், 6 மணிக்கு மேல் லோடு ஏற்றினால், ரூபாய் 300 கூலியும் வழங்கப்பட வேண்டும். லோடுமேன் கூலியில் அதிகம் கமிஷன் வாங்குவதற்காக, இந்த திமுக வட்டச் செயலாளர் செந்தில், மாலை 4 மணிக்கே வந்த யூரியா மூட்டைகளை ஏற்ற விடாமல், லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் என அனைவரையும் அலைக்கழிக்கும் வகையில் ரவுடிகளை வைத்து, லோடுமேன்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறியுள்ளார்.

இதனால், தென்மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய 1350 டன் யூரியா மூட்டைகள் மதுரை குட்ஷெட்டில் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு, நாள்தோறும் 2 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. ஒருபுறம், தமிழகத்தில் யூரியா தட்டுப்பாடு என்று, மத்திய அரசுக்கு, முதலமைச்சர்  கடந்த 16.09.2025 அன்று கடிதம் எழுதி நாடகமாடியிருக்கிறார் என அவர் தெரிவித்துள்ளார்.

மற்றொரு புறம், மதுரையை வந்தடைந்த யூரியா மூட்டைகளை, தென்மாவட்டங்களுக்குக் கொண்டு செல்ல விடாமல், அவரது கட்சிக்காரர் தடங்கல் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இதனால் பாதிக்கப்படுவது, தென்மாவட்ட விவசாயிகளே என்றும் அவர் கூறியுள்ளார்.

உடனடியாக, யூரியா மூட்டைகளை தென்மாவட்டங்களுக்குக் கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், பொதுமக்களுக்குத் தொடர்ந்து இடைஞ்சலாக நடந்து கொள்ளும் தனது கட்சியினரை, முதலமைச்சர் ஸ்டாலின்
, எச்சரித்துக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Tags: SenthilMadurai good shed.MaduraiannamalaiKudalputhururea bundles
ShareTweetSendShare
Previous Post

செய்தியாளர்களை முடக்கும் சர்வாதிகார திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Next Post

அனைத்து மதங்களையும் நம்புகிறேன் – பி.ஆர்.கவாய் விளக்கம்!

Related News

கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள கோவை கொடூரம் : திமுகவின் அவல ஆட்சியை சாடும் எதிர்க்கட்சிகள்!

திமுக கொடியை அகற்றும் பணியின்போது மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி!

எடப்பாடி அருகே செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா!

கடந்தாண்டு மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை – விவசாயிகள் குற்றச்சாட்டு!

சபரிமலை கோயில் கருவறை தங்கம் மாயமான விவகாரம் : தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி மீண்டும் கைது!

தமிழகத்தில் வசனம் இருக்கிறதே தவிர வளர்ச்சி இல்லை : தமிழிசை செளந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

கோயம்பேடு : ஆட்டோ ஓட்டுநர் வெட்டப்பட்ட வழக்கில் 5 பேர்  காவல் நிலையத்தில் சரண்!

 வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணி தொடக்கம்!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேரை சுட்டுப்பிடித்த தனிப்படை போலீசார்!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : பதிலளியுங்கள் இரும்பு மனது முதல்வரே – நயினார் நாகேந்திரன்

மனித குலத்தின் பேரழிவாக உருவெடுக்கும் 2026-ம் ஆண்டு!

புகைக்கு “குட் பை” : மலைக்க வைக்கும் மாலத்தீவுகள்!

இனி எல்லாமே ஈஸி : விரைவில் அறிமுகமாகிறது ஆதார் செயலி!

டெல்லியில் தாலிபான் துாதர் நியமனம் : இந்தியாவை பாராட்டி தள்ளும் தாலிபான்கள்!

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து சம்பவம் : ரத்த வெள்ளத்தில் சரிந்த 9 பேர் கவலைக்கிடம்!

உலகை 150 முறை அழிக்க போதுமான அணுகுண்டுகள் – அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies