சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 4 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை டிஜிபி அலுவகத்திற்குத் துணை முதல்வர் உதயநிதியின் மகன் இன்பநிதி பெயரில் இமெயில் கடிதம் ஒன்று வந்துள்ளது.
அதில், அமெரிக்கத் தூதரகம், அதன் பள்ளி வளாகம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றங்களில் 6 ஆர்டிஎக்ஸ் வகை வெடி குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்துச் சென்னை உயர் நீதிமன்றம் முழுவதும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர சோதனை நடத்தினர்.
இதில் வெடி குண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.