பயங்கரவாதத்துக்கு எதிராக வியூகம் : மீண்டும் துளிர்க்கும் இந்தியா- கனடா உறவு!
Nov 7, 2025, 11:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பயங்கரவாதத்துக்கு எதிராக வியூகம் : மீண்டும் துளிர்க்கும் இந்தியா- கனடா உறவு!

Web Desk by Web Desk
Sep 21, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கனடாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு ஆலோசகர் நத்தலி ட்ரூயின், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன் மூலம் இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் உறவு வலுப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா- கனடா உறவு சுமுகமாக இல்லாமல் இருந்தது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் படுகொலைச் செய்யப்பட்டார். இந்தப் படுகொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக நிராகரித்த இந்தியா, அவற்றை முட்டாள்தனமானவை என்றும், உள்நோக்கம் கொண்டவை என்றும் தெரிவித்திருந்தது. இந்தியாவில் தேசத் துரோக குற்றங்களுக்காகத் தேடப்படும் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்குக் கனடா புகலிடம் அளிப்பதாக இந்தியா ஆதாரப்பூர்வமாகக் குற்றம் சாட்டியது.

காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கோ, அவர்களைக் கைது செய்து, இந்தியாவுக்கு அழைத்து வந்து வழக்கு நடத்துவதற்குக் கனடா அரசிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும் இந்தியா கூறிவந்தது.

இதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றின. இந்தியா கனடாவுக்கு அளித்து வந்த விசா சேவையை நிறுத்தி வைத்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மிகவும் மோசமான நிலையை எட்டியது.

இந்நிலையில் உட்கட்சி அழுத்தம் காரணமாக லிபரல் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோவின் 9 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில், புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய கனடா பிரதமர் மார்க் கார்னி இருநாடுகளுக்கும் இடையேயான நீண்டகால உறவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.தொடர்ந்து,கனடாவில் நடந்த G7 உச்சிமாநாட்டின் போதும் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மீண்டும் இரு நாடுகளும் தங்களது தூதர்களை நியமித்தன.

இந்நிலையில், கடந்த 18 ஆம் தேதி டெல்லி வந்திருந்த கனடாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு ஆலோசகர் ( Nathalie Drouin ) நத்தலி ட்ரூயின்,இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இருநாட்டுத் தலைவர்களும் முன்னெடுத்த இருதரப்பு உறவுகளை மீட்டெடுக்கவும் இருவரும் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயங்கரவாத எதிர்ப்பு, நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுதல் மற்றும் உளவுத்துறை பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும், எதிர்கால ஒத்துழைப்புக்கான முன்னுரிமைகள் பற்றியும் இரு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும் விவாதித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

Tags: பயங்கரவாதத்துக்கு எதிராக வியூகம்IndiaCanadaStrategy against terrorism: India-Canada relations to flourish againஇந்தியா- கனடா உறவு
ShareTweetSendShare
Previous Post

நவராத்திரி பண்டிகை – அயோத்தியில் களைகட்டிய அலங்கார பொருட்கள் விற்பனை!

Next Post

பிரதமர் மோடி பிறந்த நாள் – புதுச்சேரியில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டி!

Related News

விற்பனைக்கு வரும் நடப்பு சாம்பியன் RCB? : SEBI அறிக்கையில் வெளியான தகவலால் அதிர்ச்சி – சிறப்பு தொகுப்பு!

ஜவுளி பூங்காவிற்கு பதில் சாயப்பட்டறை ஆலையா? : கொந்தளிக்கும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

கடற்படையில் INS இஷாக் ஆய்வுக் கப்பல் இணைப்பு!

செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவை முந்தும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்களில் அன்னதானம் – நிர்வாக அதிகாரி அறிவிப்பு!

சுதந்திர உணர்வை வலுப்படுத்தியது வந்தே மாதரம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

தருமபுரம் ஆதீனம் மணிவிழா – யானை, குதிரை, பசு உள்ளிட்ட விலங்குகளுக்கு சிறப்பு பூஜை!

செங்கோட்டையன் விவகாரத்தில் திமுக பின்னணியில் உள்ளதோ என்ற சந்தேகம் உள்ளது – நயினார் நாகேந்திரன்

வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை கண்டு திமுக அஞ்சுவது ஏன்? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிபிஐ முன் ஆஜர்!

பவானி சங்கமேஸ்வரர் கோயில் தற்காலிக கடை ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தென்காசி மாவட்ட கல்குவாரி ஆய்வு அறிக்கை – தமிழக அரசுக்கு நீதிமன்றம் இறுதி அவகாசம்!

திருச்சி அருகே ஓய்வு பெற்ற தாசில்தார் வெட்டிக் கொலை!

சட்ட மசோதாக்களுக்கு உடனுக்குடன் ஒப்புதல் – ஆளுநர் மாளிகை விளக்கம்!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது – சுதாகர் ரெட்டி

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை சுற்றி நடைபாதை கடைகள் – ஆக்கிரமிப்பு பக்தர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies