பீகாரை கலக்கும் காளான் லேடி : 70 ஆயிரம் பெண்களின் வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்றிய தேவதை!
Mar 15, 2026, 02:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பீகாரை கலக்கும் காளான் லேடி : 70 ஆயிரம் பெண்களின் வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்றிய தேவதை!

Murugesan M by Murugesan M
Sep 20, 2025, 08:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகாரில் வேளாண் துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்த வரும் பெண் ஒருவர், அம்மாநில மக்களால் காளான் லேடி எனப் பிரியமாக அழைக்கப்படுகிறார். மத்திய, மாநில அரசுகளும், அவரது பணியைப் பாராட்டி பல்வேறு விருதுகளை வழங்கிக் கவுரவித்துள்ளன. அப்படி அவர் என்ன செய்தார். இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

பீகாரின் முங்கர் என்ற மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்தவர் பினா தேவி. ஒரு காலத்தில் அடுத்த வேலை உணவிற்கே வழியில்லாமல் தவித்து வந்த அவர், தனது குழந்தைகளை வளர்க்கவும் சிரமப்பட்டு வந்தார். குடும்பத்தின் பொருளாதாரச் சூழல், அவரது குழந்தைகள் தரமான கல்வி கற்பதற்கும் தடையாக இருந்தது.

குடும்பத்தைக் காக்க ஏதாவது வேலைச் செய்யலாம் என முடிவெடுத்த பினா தேவிக்கு, காளான் வளர்ப்பில் ஈடுபட்டால் என்ன என்ற கேள்வி எழுந்தது. ஆனால், காளான் விதைகளை வாங்க கூட பணமில்லை. எப்படியோ சிறிய தொகையைப் புரட்டினார். அதனைக் கொண்டு ஒரு கிலோ காளான் விதைகளை மட்டுமே வாங்க முடிந்தது.

காளான் வளர்ப்பில் ஈடுபட்டவுடன்தான் தெரிந்தது, அதற்கு ஏற்ற ஈரப்பதம், வெப்பநிலை உள்ளிட்டவைத் தேவை என்பது. இருந்தபோதும் சோர்வடையாமல், அருகில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்திற்குச் சென்ற பினா தேவி, காளான் வளர்ப்பு குறித்து முறையாக அறிந்துகொண்டார்.

சில ஆண்டுகளில் காளான் வளப்பு பெரிய லாபத்தைக் கொடுத்தது. குடும்ப வறுமை நீங்கியது. அவரது குழந்தைகளுக்கு மிகச் சிறந்த கல்வி கிடைக்கத் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து அவர்ச் செய்த செயல்தான் அவரை, பீகாரின் காளான் லேடியாக உயர்த்தியது.

தனது கிராமத்தில் பெரும்பாலான பெண்கள் வறுமையில் வாடி வருவதைக் கவனித்த அவர், அவர்களுக்கும் காளான் வளர்ப்பு குறித்து கற்றுகொடுக்க முன்வந்தார். பின்னர் அருகில் உள்ள மற்ற கிராம பெண்களுக்கும் காளான் வளர்ப்பை அவர்  கற்பித்தார். அவரது இந்த முயற்சியால், இன்றைய தேதிக்குப் பீகாரில் சுமார் 100 கிராமங்களை  சேர்ந்த பெண்களின் முக்கிய வருவாய் ஆதாரமாகக் காளான் வளர்ப்பு மாறியுள்ளது.

சுயதொழிலால் தானும் முன்னேறி, மற்ற பெண்களையும் முன்னேற்றிய பினா தேவிக்கு, பீகார் அரசு சிறந்த பெண் விவசாயிக்கான விருது வழங்கிக் கவுரவப்படுத்தியது. 2020ம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று அப்போதைய குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த், பினா தேவியை நேரில் அழைத்துப் பாராட்டிய நிலையில், பிரதமர் மோடியும் தனது மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பினா தேவியை நாடறிய செய்தார். தற்போது காளான் வளர்ப்பைத் தாண்டி, இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வையும் அவர் ஏற்படுத்தி வருகிறார்.

“நான் இதுவரைச் சுமார் 70 ஆயிரம் பெண்களுக்குக் காளான் வளர்ப்பு குறித்து கற்பித்துள்ளேன். நான் சுயதொழில் தொடங்கியபோது எனது செயலை  பலர் பைத்தியக்காரத்தனமானது எனக் கேலி செய்தனர். ஆனால், நான் விடாப்பிடியாக இருந்தேன். தற்போது எனது வாழ்க்கையையும் மேம்படுத்தி, சகப் பெண்களின் வாழ்க்கையையும் உயர்த்தியுள்ளேன்.” எனத் தெரிவிக்கிறார் பீகாரின் காளான் லேடியான பினா தேவி.

Tags: The Mushroom Lady who stirred up Bihar: The angel who lit the lives of 70 thousands women!பீகாரை கலக்கும் காளான் லேடிதேவதைவேளாண் துறைகாளான் லேடி
ShareTweetSendShare
Previous Post

கரூர்ல ஒரு தரமான சம்பவம் : காசுக்கு பேசச்சொன்ன திமுக – ஒரே கன்டண்டை பேசி சிக்கிக் கொண்ட இன்புளுயன்சர்ஸ்!

Next Post

சலுகையை ரத்து செய்த அமெரிக்கா – இந்தியாவுக்கு மேலும் நெருக்கடி கொடுக்க திட்டம்..?

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies