பீகாரை கலக்கும் காளான் லேடி : 70 ஆயிரம் பெண்களின் வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்றிய தேவதை!
Sep 20, 2025, 08:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பீகாரை கலக்கும் காளான் லேடி : 70 ஆயிரம் பெண்களின் வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்றிய தேவதை!

Web Desk by Web Desk
Sep 20, 2025, 08:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகாரில் வேளாண் துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்த வரும் பெண் ஒருவர், அம்மாநில மக்களால் காளான் லேடி எனப் பிரியமாக அழைக்கப்படுகிறார். மத்திய, மாநில அரசுகளும், அவரது பணியைப் பாராட்டி பல்வேறு விருதுகளை வழங்கிக் கவுரவித்துள்ளன. அப்படி அவர் என்ன செய்தார். இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

பீகாரின் முங்கர் என்ற மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்தவர் பினா தேவி. ஒரு காலத்தில் அடுத்த வேலை உணவிற்கே வழியில்லாமல் தவித்து வந்த அவர், தனது குழந்தைகளை வளர்க்கவும் சிரமப்பட்டு வந்தார். குடும்பத்தின் பொருளாதாரச் சூழல், அவரது குழந்தைகள் தரமான கல்வி கற்பதற்கும் தடையாக இருந்தது.

குடும்பத்தைக் காக்க ஏதாவது வேலைச் செய்யலாம் என முடிவெடுத்த பினா தேவிக்கு, காளான் வளர்ப்பில் ஈடுபட்டால் என்ன என்ற கேள்வி எழுந்தது. ஆனால், காளான் விதைகளை வாங்க கூட பணமில்லை. எப்படியோ சிறிய தொகையைப் புரட்டினார். அதனைக் கொண்டு ஒரு கிலோ காளான் விதைகளை மட்டுமே வாங்க முடிந்தது.

காளான் வளர்ப்பில் ஈடுபட்டவுடன்தான் தெரிந்தது, அதற்கு ஏற்ற ஈரப்பதம், வெப்பநிலை உள்ளிட்டவைத் தேவை என்பது. இருந்தபோதும் சோர்வடையாமல், அருகில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்திற்குச் சென்ற பினா தேவி, காளான் வளர்ப்பு குறித்து முறையாக அறிந்துகொண்டார்.

சில ஆண்டுகளில் காளான் வளப்பு பெரிய லாபத்தைக் கொடுத்தது. குடும்ப வறுமை நீங்கியது. அவரது குழந்தைகளுக்கு மிகச் சிறந்த கல்வி கிடைக்கத் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து அவர்ச் செய்த செயல்தான் அவரை, பீகாரின் காளான் லேடியாக உயர்த்தியது.

தனது கிராமத்தில் பெரும்பாலான பெண்கள் வறுமையில் வாடி வருவதைக் கவனித்த அவர், அவர்களுக்கும் காளான் வளர்ப்பு குறித்து கற்றுகொடுக்க முன்வந்தார். பின்னர் அருகில் உள்ள மற்ற கிராம பெண்களுக்கும் காளான் வளர்ப்பை அவர்  கற்பித்தார். அவரது இந்த முயற்சியால், இன்றைய தேதிக்குப் பீகாரில் சுமார் 100 கிராமங்களை  சேர்ந்த பெண்களின் முக்கிய வருவாய் ஆதாரமாகக் காளான் வளர்ப்பு மாறியுள்ளது.

சுயதொழிலால் தானும் முன்னேறி, மற்ற பெண்களையும் முன்னேற்றிய பினா தேவிக்கு, பீகார் அரசு சிறந்த பெண் விவசாயிக்கான விருது வழங்கிக் கவுரவப்படுத்தியது. 2020ம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று அப்போதைய குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த், பினா தேவியை நேரில் அழைத்துப் பாராட்டிய நிலையில், பிரதமர் மோடியும் தனது மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பினா தேவியை நாடறிய செய்தார். தற்போது காளான் வளர்ப்பைத் தாண்டி, இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வையும் அவர் ஏற்படுத்தி வருகிறார்.

“நான் இதுவரைச் சுமார் 70 ஆயிரம் பெண்களுக்குக் காளான் வளர்ப்பு குறித்து கற்பித்துள்ளேன். நான் சுயதொழில் தொடங்கியபோது எனது செயலை  பலர் பைத்தியக்காரத்தனமானது எனக் கேலி செய்தனர். ஆனால், நான் விடாப்பிடியாக இருந்தேன். தற்போது எனது வாழ்க்கையையும் மேம்படுத்தி, சகப் பெண்களின் வாழ்க்கையையும் உயர்த்தியுள்ளேன்.” எனத் தெரிவிக்கிறார் பீகாரின் காளான் லேடியான பினா தேவி.

Tags: The Mushroom Lady who stirred up Bihar: The angel who lit the lives of 70 thousands women!பீகாரை கலக்கும் காளான் லேடிதேவதைவேளாண் துறைகாளான் லேடி
ShareTweetSendShare
Previous Post

கரூர்ல ஒரு தரமான சம்பவம் : காசுக்கு பேசச்சொன்ன திமுக – ஒரே கன்டண்டை பேசி சிக்கிக் கொண்ட இன்புளுயன்சர்ஸ்!

Next Post

சலுகையை ரத்து செய்த அமெரிக்கா – இந்தியாவுக்கு மேலும் நெருக்கடி கொடுக்க திட்டம்..?

Related News

சலுகையை ரத்து செய்த அமெரிக்கா – இந்தியாவுக்கு மேலும் நெருக்கடி கொடுக்க திட்டம்..?

கரூர்ல ஒரு தரமான சம்பவம் : காசுக்கு பேசச்சொன்ன திமுக – ஒரே கன்டண்டை பேசி சிக்கிக் கொண்ட இன்புளுயன்சர்ஸ்!

தண்ணீரில் எரியும் காஸ் அடுப்பு : உலக பொருளாதாரத்தை மாற்றியமைக்க போகும் தமிழரின் கண்டுபிடிப்பு!

உலகில் இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது – பிரதமர் மோடி

மும்பையில் சர்வதேச கப்பல் முனையத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

டெல்லி : ரவுடி கும்பலை சேர்ந்த இருவர் சுட்டுக் கொலை – 3 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பீகாரை கலக்கும் காளான் லேடி : 70 ஆயிரம் பெண்களின் வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்றிய தேவதை!

மக்களை பற்றி சிந்திப்பவர்களையே எம்எல்ஏவாக தேர்ந்தெடுங்கள் – நிர்மலா சீதாராமன்

பாம்பன் பாலத்தில் சென்ற ரயிலில் இருந்து தவறி கடலில் விழுந்த இளைஞர்!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி

குப்பையில் இருந்த முக்கிய ஆவணங்கள் : மாவட்ட ஆட்சியர் அருணா அதிர்ச்சி!

நீலகிரி : தாவரவியல் பூங்காவில் சுற்றித்திரிந்த கரடி – பொதுமக்கள் அச்சம்!

வடமாநில வியாபாரிகளை மிரட்டிய தமிழக வாழ்வுரிமை கட்சியினர்!

திருப்பதி நோக்கி சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து!

பிரதமர் மோடியை படமாக வரைந்து பரிசளித்த சிறுவன்!

மதுரையில் பள்ளி மாணவர்களை நாய் கடித்த சம்பவத்தால் பெற்றோர்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies