ஒரே ஆண்டில் இரு சீர்த்திருத்தங்கள் - நடுத்தர மக்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்!
Mar 15, 2026, 07:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஒரே ஆண்டில் இரு சீர்த்திருத்தங்கள் – நடுத்தர மக்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்!

Murugesan M by Murugesan M
Sep 22, 2025, 07:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வருமானவரி சலுகை, ஜிஎஸ்டி குறைப்பு ஆகிய இரு சீர்திருத்தங்களால், இந்தியாவில் புதிய சகாப்தம் தொடங்குவதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி குறைப்பால், ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்றும் பிரதமர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரத் தினத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளவிருப்பதாகவும், நாட்டு மக்களுக்குத் தீபாவளி பரிசு காத்திருப்பதாகவும் அறிவித்தார். அதன்படி அண்மையில் டெல்லியில் நடந்த 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 4 அடுக்குகளாக இருந்து ஜிஎஸ்டி விதிப்பு 2 அடுக்குகளாகக் குறைத்து அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும் என்று கூறினார். வருமான வரிச் சலுகை மூலம் முதல் பரிசும், ஜிஎஸ்டி குறைப்பு மூலம் இரண்டாம் பரிசும் வழங்கப்பட்டுள்ளதால் நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார். நவராத்திரியின் முதல் நாளில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலாவதால், இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் தொடங்குவதாகவும் கூறினார்.

ஜிஎஸ்டி வரி குறைப்பால் 99 சதவிகிதப் பொருட்களின் விலை குறைவதாகக் குறிப்பிட்ட அவர், வர்த்தகத்தில் இருந்து சிக்கல்கள் களையப்பட்டிருப்பதால், அதன் பலனை நுகர்வோருக்குக் கொண்டு செல்ல வியாபாரிகளும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்றார்.

ஜிஎஸ்டி வரி குறைப்பால் கிடைக்கும் சலுகைகள், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போவதாகக் குறிப்பிட்ட அவர், ஏழைகள், பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் என அனைவரும், தங்களுக்குத் தேவையான பொருட்களை குறைந்த விலையிலேயே வாங்கலாம் என்றும் மகிழ்ச்சியுடன் கூறினார்.

வருமான வரிச் சலுகை, ஜிஎஸ்டி வரி குறைப்பால் இந்த ஆண்டில் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்படும என்றும் அவர் தெரிவித்தார். சிறு, குறு தொழில்கள் மக்களுக்குத் தேவையான பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முனைப்பு காட்ட வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் மோடி, உள்நாட்டுப் பொருட்களை நாட்டு மக்கள் கர்வத்தோடு வாங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டில் சர்வதேச தரத்தில் பொருட்கள் தயாரிக்கப்படும்போது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்தார். நாம் அனைவரும் இணைந்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.

Tags: pm modi today newsgstpm modi live today56th GST meetingTwo reforms in one year - will make a huge difference in the lives of the middle class
ShareTweetSendShare
Previous Post

விரைவில் நடிகர் சங்கக் கட்டட திறப்பு விழா – நடிகர்கள் பற்றி அவதூறு பரப்புவதா? : Youtuber-களுக்கு எச்சரிக்கை!

Next Post

டவர் இல்லையா? NO PROBLEM! : வந்துவிட்டது BSNL-ன் சேட்டிலைட் போன்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

தமிழகத்தில் தேசிய ஹோமியோபதி நிறுவனம் அமைக்க மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை – மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies