ஒரே ஆண்டில் இரு சீர்த்திருத்தங்கள் - நடுத்தர மக்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்!
Nov 8, 2025, 09:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஒரே ஆண்டில் இரு சீர்த்திருத்தங்கள் – நடுத்தர மக்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்!

Web Desk by Web Desk
Sep 22, 2025, 07:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வருமானவரி சலுகை, ஜிஎஸ்டி குறைப்பு ஆகிய இரு சீர்திருத்தங்களால், இந்தியாவில் புதிய சகாப்தம் தொடங்குவதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி குறைப்பால், ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்றும் பிரதமர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரத் தினத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளவிருப்பதாகவும், நாட்டு மக்களுக்குத் தீபாவளி பரிசு காத்திருப்பதாகவும் அறிவித்தார். அதன்படி அண்மையில் டெல்லியில் நடந்த 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 4 அடுக்குகளாக இருந்து ஜிஎஸ்டி விதிப்பு 2 அடுக்குகளாகக் குறைத்து அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும் என்று கூறினார். வருமான வரிச் சலுகை மூலம் முதல் பரிசும், ஜிஎஸ்டி குறைப்பு மூலம் இரண்டாம் பரிசும் வழங்கப்பட்டுள்ளதால் நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார். நவராத்திரியின் முதல் நாளில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலாவதால், இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் தொடங்குவதாகவும் கூறினார்.

ஜிஎஸ்டி வரி குறைப்பால் 99 சதவிகிதப் பொருட்களின் விலை குறைவதாகக் குறிப்பிட்ட அவர், வர்த்தகத்தில் இருந்து சிக்கல்கள் களையப்பட்டிருப்பதால், அதன் பலனை நுகர்வோருக்குக் கொண்டு செல்ல வியாபாரிகளும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்றார்.

ஜிஎஸ்டி வரி குறைப்பால் கிடைக்கும் சலுகைகள், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போவதாகக் குறிப்பிட்ட அவர், ஏழைகள், பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் என அனைவரும், தங்களுக்குத் தேவையான பொருட்களை குறைந்த விலையிலேயே வாங்கலாம் என்றும் மகிழ்ச்சியுடன் கூறினார்.

வருமான வரிச் சலுகை, ஜிஎஸ்டி வரி குறைப்பால் இந்த ஆண்டில் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்படும என்றும் அவர் தெரிவித்தார். சிறு, குறு தொழில்கள் மக்களுக்குத் தேவையான பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முனைப்பு காட்ட வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் மோடி, உள்நாட்டுப் பொருட்களை நாட்டு மக்கள் கர்வத்தோடு வாங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டில் சர்வதேச தரத்தில் பொருட்கள் தயாரிக்கப்படும்போது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்தார். நாம் அனைவரும் இணைந்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.

Tags: pm modi today newsgstpm modi live today56th GST meetingTwo reforms in one year - will make a huge difference in the lives of the middle class
ShareTweetSendShare
Previous Post

விரைவில் நடிகர் சங்கக் கட்டட திறப்பு விழா – நடிகர்கள் பற்றி அவதூறு பரப்புவதா? : Youtuber-களுக்கு எச்சரிக்கை!

Next Post

டவர் இல்லையா? NO PROBLEM! : வந்துவிட்டது BSNL-ன் சேட்டிலைட் போன்!

Related News

இன்றைய தலைமுறையினருக்கான பிரத்யேக மேடையை மத்திய அரசு உருவாக்கி வருகிறது – எல்.முருகன்

பீஹாரில் அதிக வாக்குப்பதிவு மீண்டும் என்டிஏ ஆட்சி அமையும் என்பதை உறுதிப்படுத்துகிறது – பிரதமர் மோடி

சமூகம் கருணையை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

5 நாட்கள் பயணமாக இன்று ஆப்பிரிக்கா செல்கிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு!

விற்பனைக்கு வரும் நடப்பு சாம்பியன் RCB? : SEBI அறிக்கையில் வெளியான தகவலால் அதிர்ச்சி – சிறப்பு தொகுப்பு!

ஜவுளி பூங்காவிற்கு பதில் சாயப்பட்டறை ஆலையா? : கொந்தளிக்கும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஒப்பந்ததாரர் தேர்வில் அமைச்சர் துரைமுருகன் பிடிவாதம் – மணல் குவாரி திறப்பு முடக்கம்!

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே செல்போன் டார்ச் அடித்து அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்!

கோவை மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

திரைப்பட புகழை நம்பி பெரிய அரசியல் கட்டமைப்பை உருவாக்கியதாக சிலர் நினைக்கிறார்கள் – கே.பி.முனுசாமி

வந்தே மாதரம் தாயை புகழ்ந்து பாடும் பாடல் – ஹெச்.ராஜா

4 வந்தே பாரத் ரயில் சேவை – இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை கைப்பற்றுமா இந்தியா? – ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்

தருமபுரம் ஆதீனம் மணிவிழா – யானை, குதிரை, பசு உள்ளிட்ட விலங்குகளுக்கு சிறப்பு பூஜை!

கடற்படையில் INS இஷாக் ஆய்வுக் கப்பல் இணைப்பு!

செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவை முந்தும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies