களைகட்டும் நவராத்திரி : கொலு பொம்மைகள் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
Jan 14, 2026, 07:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

களைகட்டும் நவராத்திரி : கொலு பொம்மைகள் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

Murugesan M by Murugesan M
Sep 23, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நவராத்திரி திருவிழா தொடங்கியிருக்கும் நிலையில் சென்னை மயிலாப்பூர் மாடவீதிகளில் கொலு பொம்மைகளின் விற்பனைக் களைகட்டத் தொடங்கியுள்ளது. பல்வேறு வடிவங்களில் பல்வேறு வண்ணங்களில் விற்பனைச் செய்யப்படும் கொலு பொம்மைகள் குறித்து இந்தச் செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சென்னையில் நவராத்திரி திருவிழா வந்துவிட்டால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது மயிலாப்பூர் மாடவீதிகள் தான். மயிலைக் கபாலீசுவரர் கோயிலைச் சுற்றிய நான்கு வீதிகளையும் வண்ணமயமான கொலு பொம்மைகள் முழுமையாக அலங்கரித்துள்ளன.

மண், பேப்பர், மரம், மார்பிள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகள் மட்டுமல்லாமல், தங்க முலாம் பூசப்பட்ட மரப்பாச்சி பொம்மைகளின் விற்பனைக் களைகட்டத் தொடங்கியுள்ளது

ஒன்பது நாட்களாகக் கொண்டாடப்படும் இந்த நவராத்திரி விழாவுக்காக விற்பனைச் செய்யப்பட்டு வரும் கொலு பொம்மைகள் அனைத்தும் கைவினைக் கலைஞர்களின் உழைப்பும், கலை நயமும் நிறைந்த கலாச்சாரச் சின்னங்களாக காட்சியளிக்கின்றன.

மண் மற்றும் காகிதக் கூழ் மூலமாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கொலு பொம்மைகள் சென்னை மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. திருக்கோயில்கள் மட்டுமல்லாது பொதுமக்கள் தங்களின் இல்லங்களிலும் கொலு வைத்து வழிபடுவதால் மயிலாப்பூர் மாடவீதியில் கொலு பொம்மை வாங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளளது.

தசாவதாரம், அஷ்டலட்சுமி, திருமணம் போன்ற பாரம்பரியங்களோடு, சுதந்திரப் போராட்ட வீரர்கள், தலைவர்களின் உருவங்கள், சந்திரயான் போன்ற சமகாலச் சிறப்புகளும் கொலு பொம்மைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 10 ரூபாயில் தொடங்கும் கொலு பொம்மை விற்பனை அதிகபட்சமாக லட்ச ரூபாய் வரை விற்பனைச் செய்யப்படுகிறது.

புதுப்புது வடிவங்களிலான கொலு பொம்மைகள் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பதால் பெரும்பாலான பொதுமக்களின் விருப்பத்திற்குரிய இடமாக மயிலாப்பூர் மாடவீதிகள் திகழ்கின்றன. தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் மயிலாப்பூருக்கு வந்து கொலுபொம்மையை வாங்குவதை வாடிக்கையாகவும் சிலர் வைத்திருக்கின்றனர்

நவராத்திரி என்றாலே கொலு பொம்மையோடு மயிலாப்பூர் மாடவீதிகளும் நினைவிற்கு வரும் அளவிற்கு மயிலாப்பூர் முழுவதுமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நடப்பாண்டு நவராத்திரி கொலு பொதுமக்களுக்கு மட்டுமல்லாது அதனை விற்கும் வியாபாரிகளுக்கும் நன்மைப் பயக்கும் வகையில் அமைந்துள்ளது.

Tags: Weedy Navaratri: People are interested in buying Kolu dollsகளைகட்டும் நவராத்திரிகொலு பொம்மைகள்ஆர்வம் காட்டும் மக்கள்
ShareTweetSendShare
Previous Post

தூய்மை பணியாளர்களுக்கு தேவையான கருவிகள் வாங்க நிதி இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Next Post

சீனாவுடன் சமரசம் செய்துகொண்ட அதிபர் ட்ரம்ப் : டிக்டாக் செயலியை முன்னிறுத்தி வெற்றிகண்ட ஜி ஜின்பிங்!

Related News

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies