களைகட்டும் நவராத்திரி : கொலு பொம்மைகள் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
Aug 15, 2026, 05:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

களைகட்டும் நவராத்திரி : கொலு பொம்மைகள் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

Murugesan M by Murugesan M
Sep 23, 2025, 07:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நவராத்திரி திருவிழா தொடங்கியிருக்கும் நிலையில் சென்னை மயிலாப்பூர் மாடவீதிகளில் கொலு பொம்மைகளின் விற்பனைக் களைகட்டத் தொடங்கியுள்ளது. பல்வேறு வடிவங்களில் பல்வேறு வண்ணங்களில் விற்பனைச் செய்யப்படும் கொலு பொம்மைகள் குறித்து இந்தச் செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சென்னையில் நவராத்திரி திருவிழா வந்துவிட்டால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது மயிலாப்பூர் மாடவீதிகள் தான். மயிலைக் கபாலீசுவரர் கோயிலைச் சுற்றிய நான்கு வீதிகளையும் வண்ணமயமான கொலு பொம்மைகள் முழுமையாக அலங்கரித்துள்ளன.

மண், பேப்பர், மரம், மார்பிள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகள் மட்டுமல்லாமல், தங்க முலாம் பூசப்பட்ட மரப்பாச்சி பொம்மைகளின் விற்பனைக் களைகட்டத் தொடங்கியுள்ளது

ஒன்பது நாட்களாகக் கொண்டாடப்படும் இந்த நவராத்திரி விழாவுக்காக விற்பனைச் செய்யப்பட்டு வரும் கொலு பொம்மைகள் அனைத்தும் கைவினைக் கலைஞர்களின் உழைப்பும், கலை நயமும் நிறைந்த கலாச்சாரச் சின்னங்களாக காட்சியளிக்கின்றன.

மண் மற்றும் காகிதக் கூழ் மூலமாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கொலு பொம்மைகள் சென்னை மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. திருக்கோயில்கள் மட்டுமல்லாது பொதுமக்கள் தங்களின் இல்லங்களிலும் கொலு வைத்து வழிபடுவதால் மயிலாப்பூர் மாடவீதியில் கொலு பொம்மை வாங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளளது.

தசாவதாரம், அஷ்டலட்சுமி, திருமணம் போன்ற பாரம்பரியங்களோடு, சுதந்திரப் போராட்ட வீரர்கள், தலைவர்களின் உருவங்கள், சந்திரயான் போன்ற சமகாலச் சிறப்புகளும் கொலு பொம்மைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 10 ரூபாயில் தொடங்கும் கொலு பொம்மை விற்பனை அதிகபட்சமாக லட்ச ரூபாய் வரை விற்பனைச் செய்யப்படுகிறது.

புதுப்புது வடிவங்களிலான கொலு பொம்மைகள் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பதால் பெரும்பாலான பொதுமக்களின் விருப்பத்திற்குரிய இடமாக மயிலாப்பூர் மாடவீதிகள் திகழ்கின்றன. தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் மயிலாப்பூருக்கு வந்து கொலுபொம்மையை வாங்குவதை வாடிக்கையாகவும் சிலர் வைத்திருக்கின்றனர்

நவராத்திரி என்றாலே கொலு பொம்மையோடு மயிலாப்பூர் மாடவீதிகளும் நினைவிற்கு வரும் அளவிற்கு மயிலாப்பூர் முழுவதுமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நடப்பாண்டு நவராத்திரி கொலு பொதுமக்களுக்கு மட்டுமல்லாது அதனை விற்கும் வியாபாரிகளுக்கும் நன்மைப் பயக்கும் வகையில் அமைந்துள்ளது.

Tags: Weedy Navaratri: People are interested in buying Kolu dollsகளைகட்டும் நவராத்திரிகொலு பொம்மைகள்ஆர்வம் காட்டும் மக்கள்
Share
Tweet
SendShare
Previous Post

தூய்மை பணியாளர்களுக்கு தேவையான கருவிகள் வாங்க நிதி இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Next Post

சீனாவுடன் சமரசம் செய்துகொண்ட அதிபர் ட்ரம்ப் : டிக்டாக் செயலியை முன்னிறுத்தி வெற்றிகண்ட ஜி ஜின்பிங்!

Related News

1000 அடி தேசியக் கொடியுடன் நடந்த நிகழ்ச்சி; மாணவர்கள் வைத்த முக்கிய கோரிக்கை

டாடா சன்ஸ் குழும புதிய தலைவர் யார்? : சந்திரசேகரன் ராஜினாமா செய்தது ஏன்? – சிறப்பு தொகுப்பு!

நடுவானில் திகில் சம்பவம் : சட்டென 300 அடி சரிந்த Air India விமானம் : சிறப்பு தொகுப்பு!

ஜஸ்டின் மணிகண்டன் ரத்தக்குழாய்களில் இரு இடங்களில் அடைப்பு – மருத்துவர்கள் உறுதி!

பெரம்பலூர் அருகே தேரில் மின்சாரம் பாய்ந்து இருவர் பலி!

சென்னை உயர்நீதிமன்ற சுதந்திர தின கொண்டாட்டம் : முதலில் வந்தே மாதரம் பாடப்படும் என அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்பாட்டம் – தஞ்சையில் இபிஎஸ் பங்கேற்பு!

கரூர் விவகாரம் : அரசு பணி ஆணை ரத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

இன்றைய தங்கம் விலை!

கெருகம்பாக்கம் ஊராட்சியில் 14 லட்சம் பறிமுதல் – தலைவர், துணைத்தலைவர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

வட்டி விகிதங்களில் கூடுதல் வெளிப்படைத்தன்மை – ரிசர்வ் வங்கி புதிய விதிமுறை!

தமிழக வாகன ஓட்டிகளுக்கு பூக்களை கொடுத்து காதில் வைக்க சொன்ன கன்னட அமைப்புகள்- மேகதாது போராட்டத்தின் போது அத்துமீறல்!

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 5 மணி நேரம் மின்தடை – நோயாளிகள் அவதி!

திருவாரூர் அருகே குளத்தில் சோலார் பேனல் – புதிய நீர்ப்பாசன திட்டம் தொடக்கம்!

அதிமுக சார்பில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க போவதில்லை – எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!

சங்கீத நாடக அகாடமி விருது -குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies