திருவாரூர் அருகே, 20 லட்சம் ரூபாய் மதிப்பில் குளத்தில் சோலார் பேனல் அமைக்கப்பட்டு, அதிலிருந்து பெறப்படும் மின்சாரம் மூலம் நீர்ப்பாசனம் செய்யும் புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் முதன் முறையாக சென்னை ஐஐடி சார்பில், நீர் ஆவியாவதை தடுக்கும் வகையில், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் விஷ்ணுபுரம் கிராமத்தில் உள்ள குளத்தில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கான மின்மோட்டாரை வேளாண்துறை அமைச்சர் வினோத் மற்றும் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி ஆகியோர் இயக்கி, திட்டத்தை தொடங்கி வைத்தனர். இத்திட்டத்தின் மூலம் பெறப்படும் மின்சாரத்தில் இருந்து, மின் மோட்டார் மூலம் சுமார் 20 ஏக்கர் பரப்பளவிற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
இதனிடையே, கோசாலையில் தயாரிக்கப்பட்ட இயற்கை திரவ உரங்களை விவசாயிகளுக்கு அமைச்சர் வினோத் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் கலந்துகொண்டனர்.
















