காஞ்சிபுரம் பட்டு ஜரிகைக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைப்பு - மூலப்பொருட்களின் செலவு 7 % குறையும் என தகவல்!
Jan 14, 2026, 02:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஞ்சிபுரம் பட்டு ஜரிகைக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைப்பு – மூலப்பொருட்களின் செலவு 7 % குறையும் என தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 24, 2025, 09:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகப்புகழ் பெற்ற காஞ்சிபுரம் பட்டு ஜரிகைக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் மூலப்பொருட்களின் செலவு 7 சதவீதம் குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி வரி குறைப்பால் தமிழகத்திற்கு என்னென்ன நன்மைகள் கிடைத்துள்ளன என்பதை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.

அதில், ஜவுளித்துறையில் பின்னலாடை, எம்பிராய்டரி ஆடைகளுக்கான ஜிஎஸ்டி வரி 5ஆக குறைக்கப்பட்டதால் உற்பத்தி செலவு 6 முதல் 11 சதவீதம் வரை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகப்புகழ் பெற்ற காஞ்சிபுரம் பட்டு ஜரிகைக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் மூலப்பொருட்களின் செலவு 7 சதவீதம் குறையும் என கூறப்பட்டுள்ளது.

பவானி ஜமுக்காளம், மதுரை சுங்குடி புடவைகள் போன்ற புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் 6 சதவீதம் வரை மலிவாக கிடைக்கும் என்றும், வெண்கலச் சிலைகளுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் தஞ்சையில் உள்ள ஆயிரத்து 200 கைவினைஞர்கள் பயனடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் உள்ள கோயில் நகை செய்யும் 500 கைவினை குடும்பங்களும் 6 சதவீதம் வரை விலை குறைப்பு பயனை அனுபவிப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

பித்தளை, கல், மர கைவினைப் பொருட்களின் விலை 7 சதவீதம் வரை குறையும் என்பதால் தஞ்சாவூர், கும்பகோணம், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் உள்ள சிற்பிகள் ஆதாயம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னை நார்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டதால் பொள்ளாச்சி, காங்கேயம், கடலூர் ஆகிய நார் மையங்களில் உள்நாட்டு ஏற்றுமதி சந்தையில் போட்டி திறன் உயரும் என கூறப்பட்டுள்ளது.

பால் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 5ஆக குறைந்து 4 முதல் 11 சதவீதம் வரை விலை குறைந்துள்ளதால் ஆவின் நெட்வொர்க் வலுவடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடல் உணவுகளுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் கடலூர், நாகை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி குறைப்பால் நோட்டு புத்தகங்களின் வியாபாரம் அதிகரித்து சிவகாசி, பெரம்பலூரில் அச்சு தொழில் வலுப்பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக குறைந்துள்ளதால் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி ஆகிய மையங்களில் உற்பத்தி அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரோன்களுக்கான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் சென்னை, ஓசூர், கோவை ஆகிய இடங்களில் உள்ள ட்ரோன் நிறுவனங்களில் உற்பத்தி அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் பொருட்களுக்கான வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் உள்ள வாகன உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியை அதிகரித்து பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு உற்பத்தி பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டதால் சென்னை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் உற்பத்தி அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், ரயில் பெட்டி இயந்திரங்களுக்கான ஜிஎஸ்டி 18ஆக குறைக்கப்பட்டுள்ளதால், சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் ரயில் பெட்டி கட்டுமான செலவுகள் 5 சதவீதம் மிச்சமாகும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags: Kanchipuram paddugstcentral governmentKanchipuram silk laceKanchipuram pattu
ShareTweetSendShare
Previous Post

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் ஷாருக்கான்!

Next Post

7 போர்களை நிறுத்தினேன், ஆனால் உக்ரைன் – ரஷ்யா போர்? – ட்ரம்ப் கவலை!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies