காஞ்சிபுரம் பட்டு ஜரிகைக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைப்பு - மூலப்பொருட்களின் செலவு 7 % குறையும் என தகவல்!
Sep 13, 2026, 02:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஞ்சிபுரம் பட்டு ஜரிகைக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைப்பு – மூலப்பொருட்களின் செலவு 7 % குறையும் என தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 24, 2025, 09:28 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகப்புகழ் பெற்ற காஞ்சிபுரம் பட்டு ஜரிகைக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் மூலப்பொருட்களின் செலவு 7 சதவீதம் குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி வரி குறைப்பால் தமிழகத்திற்கு என்னென்ன நன்மைகள் கிடைத்துள்ளன என்பதை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.

அதில், ஜவுளித்துறையில் பின்னலாடை, எம்பிராய்டரி ஆடைகளுக்கான ஜிஎஸ்டி வரி 5ஆக குறைக்கப்பட்டதால் உற்பத்தி செலவு 6 முதல் 11 சதவீதம் வரை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகப்புகழ் பெற்ற காஞ்சிபுரம் பட்டு ஜரிகைக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் மூலப்பொருட்களின் செலவு 7 சதவீதம் குறையும் என கூறப்பட்டுள்ளது.

பவானி ஜமுக்காளம், மதுரை சுங்குடி புடவைகள் போன்ற புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் 6 சதவீதம் வரை மலிவாக கிடைக்கும் என்றும், வெண்கலச் சிலைகளுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் தஞ்சையில் உள்ள ஆயிரத்து 200 கைவினைஞர்கள் பயனடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் உள்ள கோயில் நகை செய்யும் 500 கைவினை குடும்பங்களும் 6 சதவீதம் வரை விலை குறைப்பு பயனை அனுபவிப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

பித்தளை, கல், மர கைவினைப் பொருட்களின் விலை 7 சதவீதம் வரை குறையும் என்பதால் தஞ்சாவூர், கும்பகோணம், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் உள்ள சிற்பிகள் ஆதாயம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னை நார்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டதால் பொள்ளாச்சி, காங்கேயம், கடலூர் ஆகிய நார் மையங்களில் உள்நாட்டு ஏற்றுமதி சந்தையில் போட்டி திறன் உயரும் என கூறப்பட்டுள்ளது.

பால் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 5ஆக குறைந்து 4 முதல் 11 சதவீதம் வரை விலை குறைந்துள்ளதால் ஆவின் நெட்வொர்க் வலுவடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடல் உணவுகளுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் கடலூர், நாகை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி குறைப்பால் நோட்டு புத்தகங்களின் வியாபாரம் அதிகரித்து சிவகாசி, பெரம்பலூரில் அச்சு தொழில் வலுப்பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக குறைந்துள்ளதால் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி ஆகிய மையங்களில் உற்பத்தி அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரோன்களுக்கான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் சென்னை, ஓசூர், கோவை ஆகிய இடங்களில் உள்ள ட்ரோன் நிறுவனங்களில் உற்பத்தி அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் பொருட்களுக்கான வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் உள்ள வாகன உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியை அதிகரித்து பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு உற்பத்தி பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டதால் சென்னை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் உற்பத்தி அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், ரயில் பெட்டி இயந்திரங்களுக்கான ஜிஎஸ்டி 18ஆக குறைக்கப்பட்டுள்ளதால், சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் ரயில் பெட்டி கட்டுமான செலவுகள் 5 சதவீதம் மிச்சமாகும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags: Kanchipuram paddugstcentral governmentKanchipuram silk laceKanchipuram pattu
Share
Tweet
SendShare
Previous Post

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் ஷாருக்கான்!

Next Post

7 போர்களை நிறுத்தினேன், ஆனால் உக்ரைன் – ரஷ்யா போர்? – ட்ரம்ப் கவலை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies