இந்திய மூதாட்டியை கொடுமைப்படுத்திய குடியுரமை அதிகாரிகள் : தவித்த வாய்க்கு தண்ணீர் தராத அவலம் - சிறப்பு கட்டுரை!
Jan 14, 2026, 01:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய மூதாட்டியை கொடுமைப்படுத்திய குடியுரமை அதிகாரிகள் : தவித்த வாய்க்கு தண்ணீர் தராத அவலம் – சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 27, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் 73 வயது நிரம்பிய சீக்கிய மூதாட்டியை குடியுரிமை அதிகாரிகள் கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்…

அமெரிக்காவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பஞ்சாப்பை சேர்ந்த 73 வயது நிரம்பிய மூதாட்டியை அங்குள்ள அதிகாரிகள் நாடு கடத்தி உள்ளனர். மூதாட்டி என்று கூட பாராமல் அவரது கையில் கைவிலங்கு மாட்டி கடைசியாக குடும்பத்தினரிடம் கூட சந்திக்கவிடாமல் நாடு கடத்திய சம்பவம் பலரையும் கலங்க வைத்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்ஜித் கவுர் என்பவரின் கணவர் இறந்துவிட்ட நிலையில், 2 மகன்களுடன் பஞ்சாப்பில் வசித்து வந்த ஹர்ஜித் கவுர், கடந்த 1992-ம் ஆண்டில் அமெரிக்கா சென்றதாக தெரிகிறது. வடக்கு கலிபோர்னியாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த அவர், அங்குள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். ஹர்ஜித் கவுர் உரிய ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் தங்கியதாக கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதுமே சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவதாக அறிவித்தார். இதனால் ஹர்ஜித் கவுரும் பாதிக்கப்பட, அவரை அந்நாட்டு குடியுரிமை அதிகாரிகள் ஈவு இரக்கமின்றி நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

70 மணி நேரமாக ஹர்ஜித் கவுரை சிறைபிடித்து வைத்திருந்த அதிகாரிகள், வயதான பெண்மணி என்று கூட பார்க்காமல், கொடுமைப்படுத்தியுள்ளனர். உறங்குவதற்கு படுக்கை கொடுக்காமல் அலைக்கழித்த அதிகாரிகள், அவரை தரையில் படுத்து உறங்கச்செய்துள்ளனர்.

வயதான காலத்தில் மாத்திரைகள் உட்கொள்ளும் நபருக்கு, உணவளிக்காமல் இருந்த அதிகாரிகள், ஹர்ஜித் கவுர் கோரிக்கை விடுத்தும் அதை நிராகரித்துள்ளனர். ஒரு கட்டத்தில் செமிக்கவே செய்யாத சீஸ் சாண்ட்விச்சை கொடுத்துள்ளனர். பின்னர் மருந்துகள் உட்கொள்வதற்கு தண்ணீர் கேட்டபோது, ஐஸ் கட்டிகளை கொடுத்து மனிதாபிமானமற்றவர்களை போல் நடந்து கொண்டுள்ளனர்.

இதனை ஹர்ஜித் கவுரின் வழக்கறிஞர் இன்ஸ்டாகிராமில் பதிவிட, அமெரிக்க குடியுரிமை அதிகாரிகளை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Tags: handcuffingHarjit KauDonald Trump timmigration officialspunjabUnited StatesSikh woman being tortured by immigration officials
ShareTweetSendShare
Previous Post

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை – தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

Next Post

பிரதமர் மோடி பிறந்த நாள் – வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம் வழங்கிய நயினார் நாகேந்திரன்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies