இந்திய மூதாட்டியை கொடுமைப்படுத்திய குடியுரமை அதிகாரிகள் : தவித்த வாய்க்கு தண்ணீர் தராத அவலம் - சிறப்பு கட்டுரை!
Sep 10, 2026, 02:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய மூதாட்டியை கொடுமைப்படுத்திய குடியுரமை அதிகாரிகள் : தவித்த வாய்க்கு தண்ணீர் தராத அவலம் – சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 27, 2025, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவில் 73 வயது நிரம்பிய சீக்கிய மூதாட்டியை குடியுரிமை அதிகாரிகள் கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்…

அமெரிக்காவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பஞ்சாப்பை சேர்ந்த 73 வயது நிரம்பிய மூதாட்டியை அங்குள்ள அதிகாரிகள் நாடு கடத்தி உள்ளனர். மூதாட்டி என்று கூட பாராமல் அவரது கையில் கைவிலங்கு மாட்டி கடைசியாக குடும்பத்தினரிடம் கூட சந்திக்கவிடாமல் நாடு கடத்திய சம்பவம் பலரையும் கலங்க வைத்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்ஜித் கவுர் என்பவரின் கணவர் இறந்துவிட்ட நிலையில், 2 மகன்களுடன் பஞ்சாப்பில் வசித்து வந்த ஹர்ஜித் கவுர், கடந்த 1992-ம் ஆண்டில் அமெரிக்கா சென்றதாக தெரிகிறது. வடக்கு கலிபோர்னியாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த அவர், அங்குள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். ஹர்ஜித் கவுர் உரிய ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் தங்கியதாக கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதுமே சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவதாக அறிவித்தார். இதனால் ஹர்ஜித் கவுரும் பாதிக்கப்பட, அவரை அந்நாட்டு குடியுரிமை அதிகாரிகள் ஈவு இரக்கமின்றி நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

70 மணி நேரமாக ஹர்ஜித் கவுரை சிறைபிடித்து வைத்திருந்த அதிகாரிகள், வயதான பெண்மணி என்று கூட பார்க்காமல், கொடுமைப்படுத்தியுள்ளனர். உறங்குவதற்கு படுக்கை கொடுக்காமல் அலைக்கழித்த அதிகாரிகள், அவரை தரையில் படுத்து உறங்கச்செய்துள்ளனர்.

வயதான காலத்தில் மாத்திரைகள் உட்கொள்ளும் நபருக்கு, உணவளிக்காமல் இருந்த அதிகாரிகள், ஹர்ஜித் கவுர் கோரிக்கை விடுத்தும் அதை நிராகரித்துள்ளனர். ஒரு கட்டத்தில் செமிக்கவே செய்யாத சீஸ் சாண்ட்விச்சை கொடுத்துள்ளனர். பின்னர் மருந்துகள் உட்கொள்வதற்கு தண்ணீர் கேட்டபோது, ஐஸ் கட்டிகளை கொடுத்து மனிதாபிமானமற்றவர்களை போல் நடந்து கொண்டுள்ளனர்.

இதனை ஹர்ஜித் கவுரின் வழக்கறிஞர் இன்ஸ்டாகிராமில் பதிவிட, அமெரிக்க குடியுரிமை அதிகாரிகளை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Tags: handcuffingHarjit KauDonald Trump timmigration officialspunjabUnited StatesSikh woman being tortured by immigration officials
Share
Tweet
SendShare
Previous Post

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை – தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

Next Post

பிரதமர் மோடி பிறந்த நாள் – வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம் வழங்கிய நயினார் நாகேந்திரன்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies