கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கூட்டநெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதாக தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது எனக்கூறிய அவர், உச்சநீதிமன்றம் இந்த பிரச்சினையை இன்றே விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், தமிழக அரசு அமைத்துள்ள குழு மீது நம்பிக்கை இல்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.