கரூரில் தவெக தலைவர் பிரசாரம் மேற்கொண்ட வேலுசாமிபுரத்தில் ஒரு நபர் ஆணையம் விசாரணையை தொடங்கியது.
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்ட நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் விஜய் பிரசாரம் மேற்கொண்ட வேலுசாமிபுரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் போலீசாருடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வேலுசாமிபுரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் கேட்டறிந்தார்.