3 பெண்களை கொன்ற போதைப்பொருள் கும்பல் : நேரலையில் படுகொலை - அதிர்ச்சியில் அர்ஜென்டினா!
Sep 30, 2025, 03:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3 பெண்களை கொன்ற போதைப்பொருள் கும்பல் : நேரலையில் படுகொலை – அதிர்ச்சியில் அர்ஜென்டினா!

Web Desk by Web Desk
Sep 29, 2025, 11:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அர்ஜென்டினாவில் 3 இளம்பெண்கள் இன்ஸ்டாகிராம் நேரலையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் உலுக்கிய இந்தக் கொடூர சம்பவம்குறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்..

அர்ஜென்டினாவில் காணாமல் போனதாக நம்பப்பட்ட3 இளம்பெண்களைப் போதைப்பொருள் கடத்தும் கும்பல் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்ததுடன் மட்டுமில்லாமல் அதனை இன்ஸ்டாகிராமில் நேரலை செய்த மிருகத்தனமான செயல், பொதுமக்களைக் கொதித்து எழச் செய்துள்ளது.

காவல்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, கொலை செய்யப்பட்ட 3 பெண்களும் கொலையாளிகளின் சதிச்செயலில் சிக்கி, சொகுசு வீட்டிற்கு வரவழைக்கப்பட்டதாகவும், அங்கு அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது.

பெண்களை கொடூரமான முறையில் கொலை செய்ததுடன், சுமார் 45 பேர் கொண்ட இன்ஸ்டாகிராம் குழுவிற்கு நேரலையில் ஒளிப்பரப்பியதை அடிப்படையாகக் கொண்டு விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசார், குற்றச்செயலில் ஈடுபட்ட 12 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இதனிடையே, குற்றம்சாட்டப்பட்ட 3 பெண்களுக்கும், போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்க, அது மக்களை மேலும் கோபப்படுத்தியுள்ளது.

போதைப்பொருளை திருட நினைத்தால் இதான் கதி எனக் கொலைகார கும்பல் தலைவன் பேசிய ஆதாரம் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவிக்க, அது விவாத பொருளாக மாறியுள்ளது. கொலை செய்யப்பட்ட மூன்று பெண்களும் விலை மாதர்கள் என ஊடங்களும் செய்தி வெளியிட, பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றம் சுமத்தும் நிலை என்றுதான் மாறுமோ? என மக்கள் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதோடு விட்டுவிடாமல், நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி சென்ற ஆயிரக்கணக்கான மக்கள், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

அதிபர் மிலெய் தலைமையிலான அரசு கடைப்பிடிக்கும் முதலாளித்துவ கொள்கையே இது போன்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணம் என்றும் மிலெய் ஆட்சிக்கு வந்தபிறகு நாட்டில் வேலையின்மை, பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் உச்சத்தில் உள்ளதாகவும் அதிருப்தி தெரிவித்தனர்.

மனிதக் கடத்தல், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் திட்டத்தை மிலெய் கைவிட்டு விட்டதாகவும், போதைப்பொருள் கும்பல்கள் அட்டூழியத்தில் ஈடுபடுவதற்கு அதிபர் மிலெயின் அஜாக்கிரதையே காரணம் என்றும் குற்றம் சுமத்துகின்றனர். குற்றங்களை கட்டுப்படுத்தாமல் திரைமறைவில் உதவும் வேலையில் அரசு ஈடுபட்டால் விளைவுகள் வேறுமாதிரி இருக்கும் என்றும் போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: அர்ஜென்டினாDrug gang kills 3 women: Argentina in shock over live broadcast of murderநேரலையில் படுகொலை
ShareTweetSendShare
Previous Post

கழிவுநீர் ஓடையாகும் வைகை : மாநகராட்சி நிர்வாக அலட்சியத்தால் அவலம்!

Next Post

இதுதான் எதிர்காலம் : வியப்பில் அமெரிக்கர் – கவனத்தை ஈர்த்த சீனாவின் ரோபோ கால்கள்!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies