3 பெண்களை கொன்ற போதைப்பொருள் கும்பல் : நேரலையில் படுகொலை - அதிர்ச்சியில் அர்ஜென்டினா!
Jul 24, 2026, 06:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3 பெண்களை கொன்ற போதைப்பொருள் கும்பல் : நேரலையில் படுகொலை – அதிர்ச்சியில் அர்ஜென்டினா!

Murugesan M by Murugesan M
Sep 29, 2025, 11:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அர்ஜென்டினாவில் 3 இளம்பெண்கள் இன்ஸ்டாகிராம் நேரலையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் உலுக்கிய இந்தக் கொடூர சம்பவம்குறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்..

அர்ஜென்டினாவில் காணாமல் போனதாக நம்பப்பட்ட3 இளம்பெண்களைப் போதைப்பொருள் கடத்தும் கும்பல் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்ததுடன் மட்டுமில்லாமல் அதனை இன்ஸ்டாகிராமில் நேரலை செய்த மிருகத்தனமான செயல், பொதுமக்களைக் கொதித்து எழச் செய்துள்ளது.

காவல்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, கொலை செய்யப்பட்ட 3 பெண்களும் கொலையாளிகளின் சதிச்செயலில் சிக்கி, சொகுசு வீட்டிற்கு வரவழைக்கப்பட்டதாகவும், அங்கு அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது.

பெண்களை கொடூரமான முறையில் கொலை செய்ததுடன், சுமார் 45 பேர் கொண்ட இன்ஸ்டாகிராம் குழுவிற்கு நேரலையில் ஒளிப்பரப்பியதை அடிப்படையாகக் கொண்டு விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசார், குற்றச்செயலில் ஈடுபட்ட 12 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இதனிடையே, குற்றம்சாட்டப்பட்ட 3 பெண்களுக்கும், போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்க, அது மக்களை மேலும் கோபப்படுத்தியுள்ளது.

போதைப்பொருளை திருட நினைத்தால் இதான் கதி எனக் கொலைகார கும்பல் தலைவன் பேசிய ஆதாரம் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவிக்க, அது விவாத பொருளாக மாறியுள்ளது. கொலை செய்யப்பட்ட மூன்று பெண்களும் விலை மாதர்கள் என ஊடங்களும் செய்தி வெளியிட, பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றம் சுமத்தும் நிலை என்றுதான் மாறுமோ? என மக்கள் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதோடு விட்டுவிடாமல், நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி சென்ற ஆயிரக்கணக்கான மக்கள், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

அதிபர் மிலெய் தலைமையிலான அரசு கடைப்பிடிக்கும் முதலாளித்துவ கொள்கையே இது போன்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணம் என்றும் மிலெய் ஆட்சிக்கு வந்தபிறகு நாட்டில் வேலையின்மை, பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் உச்சத்தில் உள்ளதாகவும் அதிருப்தி தெரிவித்தனர்.

மனிதக் கடத்தல், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் திட்டத்தை மிலெய் கைவிட்டு விட்டதாகவும், போதைப்பொருள் கும்பல்கள் அட்டூழியத்தில் ஈடுபடுவதற்கு அதிபர் மிலெயின் அஜாக்கிரதையே காரணம் என்றும் குற்றம் சுமத்துகின்றனர். குற்றங்களை கட்டுப்படுத்தாமல் திரைமறைவில் உதவும் வேலையில் அரசு ஈடுபட்டால் விளைவுகள் வேறுமாதிரி இருக்கும் என்றும் போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: அர்ஜென்டினாDrug gang kills 3 women: Argentina in shock over live broadcast of murderநேரலையில் படுகொலை
ShareTweetSendShare
Previous Post

கழிவுநீர் ஓடையாகும் வைகை : மாநகராட்சி நிர்வாக அலட்சியத்தால் அவலம்!

Next Post

இதுதான் எதிர்காலம் : வியப்பில் அமெரிக்கர் – கவனத்தை ஈர்த்த சீனாவின் ரோபோ கால்கள்!

Related News

மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் மீது தகுதி நீக்க நடவடிக்கை – சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு!

எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்கும் பாகிஸ்தான் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு!

தூத்துக்குடி அருணாச்சலம் மரணத்திற்கு காரணமாக காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நீர் பங்கீடு விவகாரம் : ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 70,485 பேர் விண்ணப்பம்!

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம் – ரயில்வே அமைச்சகம்

ஜனநாயக நாடுகளின் அமைதியை சீர்குலைக்கும் DEEP STATE : டெல்லி மாணவர் போராட்டத்தின் பின்னணியில் யார்? – சிறப்பு தொகுப்பு!

கேரள ஆர்எஸ்எஸ் நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கு – பிஎஃப்ஐ நிர்வாகி முகமது அலி கைது!

டெல்லி போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு மதமாற்ற அமைப்புகள் – அம்பலமான அதிர்ச்சி தகவல்!

சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்ப முயற்சி – டெல்லி காவல்துறை எச்சரிக்கை!

நீண்ட தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ‘குஷா’ ஏவுகணை – முதற்கட்ட சோதனை வெற்றி!

ஜந்தர் மந்தரில் குழப்பம்; சீக்கியர்கள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இடையே கைகலப்பு

அரிய வகை கனிமங்கள் : ஜப்பானுக்கு ஏற்றுமதியை நிறுத்திய சீனா – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies