3 பெண்களை கொன்ற போதைப்பொருள் கும்பல் : நேரலையில் படுகொலை - அதிர்ச்சியில் அர்ஜென்டினா!
Sep 12, 2026, 01:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3 பெண்களை கொன்ற போதைப்பொருள் கும்பல் : நேரலையில் படுகொலை – அதிர்ச்சியில் அர்ஜென்டினா!

Murugesan M by Murugesan M
Sep 29, 2025, 11:53 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அர்ஜென்டினாவில் 3 இளம்பெண்கள் இன்ஸ்டாகிராம் நேரலையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் உலுக்கிய இந்தக் கொடூர சம்பவம்குறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்..

அர்ஜென்டினாவில் காணாமல் போனதாக நம்பப்பட்ட3 இளம்பெண்களைப் போதைப்பொருள் கடத்தும் கும்பல் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்ததுடன் மட்டுமில்லாமல் அதனை இன்ஸ்டாகிராமில் நேரலை செய்த மிருகத்தனமான செயல், பொதுமக்களைக் கொதித்து எழச் செய்துள்ளது.

காவல்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, கொலை செய்யப்பட்ட 3 பெண்களும் கொலையாளிகளின் சதிச்செயலில் சிக்கி, சொகுசு வீட்டிற்கு வரவழைக்கப்பட்டதாகவும், அங்கு அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது.

பெண்களை கொடூரமான முறையில் கொலை செய்ததுடன், சுமார் 45 பேர் கொண்ட இன்ஸ்டாகிராம் குழுவிற்கு நேரலையில் ஒளிப்பரப்பியதை அடிப்படையாகக் கொண்டு விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசார், குற்றச்செயலில் ஈடுபட்ட 12 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இதனிடையே, குற்றம்சாட்டப்பட்ட 3 பெண்களுக்கும், போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்க, அது மக்களை மேலும் கோபப்படுத்தியுள்ளது.

போதைப்பொருளை திருட நினைத்தால் இதான் கதி எனக் கொலைகார கும்பல் தலைவன் பேசிய ஆதாரம் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவிக்க, அது விவாத பொருளாக மாறியுள்ளது. கொலை செய்யப்பட்ட மூன்று பெண்களும் விலை மாதர்கள் என ஊடங்களும் செய்தி வெளியிட, பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றம் சுமத்தும் நிலை என்றுதான் மாறுமோ? என மக்கள் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதோடு விட்டுவிடாமல், நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி சென்ற ஆயிரக்கணக்கான மக்கள், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

அதிபர் மிலெய் தலைமையிலான அரசு கடைப்பிடிக்கும் முதலாளித்துவ கொள்கையே இது போன்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணம் என்றும் மிலெய் ஆட்சிக்கு வந்தபிறகு நாட்டில் வேலையின்மை, பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் உச்சத்தில் உள்ளதாகவும் அதிருப்தி தெரிவித்தனர்.

மனிதக் கடத்தல், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் திட்டத்தை மிலெய் கைவிட்டு விட்டதாகவும், போதைப்பொருள் கும்பல்கள் அட்டூழியத்தில் ஈடுபடுவதற்கு அதிபர் மிலெயின் அஜாக்கிரதையே காரணம் என்றும் குற்றம் சுமத்துகின்றனர். குற்றங்களை கட்டுப்படுத்தாமல் திரைமறைவில் உதவும் வேலையில் அரசு ஈடுபட்டால் விளைவுகள் வேறுமாதிரி இருக்கும் என்றும் போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: அர்ஜென்டினாDrug gang kills 3 women: Argentina in shock over live broadcast of murderநேரலையில் படுகொலை
Share
Tweet
SendShare
Previous Post

கழிவுநீர் ஓடையாகும் வைகை : மாநகராட்சி நிர்வாக அலட்சியத்தால் அவலம்!

Next Post

இதுதான் எதிர்காலம் : வியப்பில் அமெரிக்கர் – கவனத்தை ஈர்த்த சீனாவின் ரோபோ கால்கள்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies