கழிவுநீர் ஓடையாகும் வைகை : மாநகராட்சி நிர்வாக அலட்சியத்தால் அவலம்!
Sep 12, 2026, 12:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கழிவுநீர் ஓடையாகும் வைகை : மாநகராட்சி நிர்வாக அலட்சியத்தால் அவலம்!

Murugesan M by Murugesan M
Sep 29, 2025, 11:43 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேனியில் தொடங்கி ராமநாதபுரத்தில் நிறைவடையும் வைகையாறு மதுரையை கடக்கும்போது கழிவுநீர் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. புனித நதிகளில் ஒன்றாகக் கருதப்படும் வைகை ஆற்றில் கலக்கப்படும் கழிவுநீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் வருசநாடு மலைத்தொடரில் பிறக்கும் வைகை ஆறு, மதுரை, சிவகங்கை மாவட்டங்கள் வழியாகச் சுமார் 250 கிலோ மீட்டர் பயணித்து ராமநாதபுரம் கண்மாயில் தன் பயணத்தை நிறைவு செய்கிறது. கடலில் கலக்காத ஒரே நதி எனும்பெயரைப் பெற்றற வைகை நதி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத் தேவையோடு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

இலக்கியங்களில் பாடப்பட்ட பெருமைக் கொண்ட வைகை நதி, மதுரை மாநகருக்குள் நுழைவதில் தொடங்கி மாநகரை கடக்கும் வரையிலான 120கிலோ மீட்டர் தூரம் அதிகளவில் மாசுபடுத்தப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. கழிவுநீர் கலப்பதோடு, பிளாஸ்டிக் குப்பைகள், கட்டட மற்றும் இறைச்சிக் கழிவுகள் கலக்கப்படுவதால் வைகை ஆறு மாசடைந்து சுகாதார சீர்கேடு எழுந்துள்ளது.

வைகையாற்றை காக்கவும், மாசடைவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்ட நிலையிலும், 30க்கும் அதிகமான இடங்களில் கழிவுநீர் கலந்து வருகிறது. வைகை ஆற்றிலிருந்து விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கும் நிலையில், மற்றொரு புறம் மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் வைகையாற்றில் கழிவுநீர்கலப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வைகை ஆற்றைப் பாதுகாக்க சிசிடிவி கேமிராக்கள் பொருத்த வேண்டும், கழிவுகளைக் கொட்டும்நபர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்எனச் சமூகக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், வைகைஆற்றைப் புதுப்பிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

மழைநீர் கால்வாய் குழாய்கள் வழியாகக் கழிவுநீர் வைகையாற்றில் கலக்கும் நிலையில் அதனை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இறைச்சிக் கழிவுகளை கொட்டுவோர் மீது அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் துணை மேயர் நாகராஜன் தெரிவித்துள்ளார் ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், பாசனத் தேவையை பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கும் வைகையாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக மதுரை மாநகராட்சி நிர்வாகமும் தமிழக அரசும் கூடுதல் கவனம் செலுத்தி வைகை ஆற்றை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: கழிவுநீர் ஓடையாகும் வைகைMaduraiNEWS TODAYVaigai becomes a sewage stream: Suffering due to the negligence of the corporation administration
Share
Tweet
SendShare
Previous Post

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பிறந்த நாள் – எல்.முருகன், அண்ணாமலை வாழ்த்து!

Next Post

3 பெண்களை கொன்ற போதைப்பொருள் கும்பல் : நேரலையில் படுகொலை – அதிர்ச்சியில் அர்ஜென்டினா!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies