திருப்பதி பிரம்மோற்சவத்தின் 6ம் நாள் நிகழ்வில் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.
உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த புதன்கிழமை வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாளான இன்று காலை கல்யாண உற்சவ மண்டபத்தில் அனுமந்த வாகனத்தில் கோதண்ட ராமர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி தோன்றினார்.
இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா… கோவிந்தா என பக்தி முழக்கமிட்டப்படி வழிபட்டனர். தொடர்ந்து இன்று மாலை தங்க தேரோட்டமும், இரவு கஜ வாகன புறப்பாடும் நடைபெறவுள்ளது.