மந்த கதியில் துார்வாரும் பணி : பெரிய ஏரி கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதாக புகார்!
Mar 15, 2026, 03:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மந்த கதியில் துார்வாரும் பணி : பெரிய ஏரி கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதாக புகார்!

Murugesan M by Murugesan M
Sep 30, 2025, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பல்லாவரம் அருகே அமைந்திருக்கும் திருநீர்மலை பெரிய ஏரியைத் தூர்வாரும் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது. ஏரியைச் சுற்றி குவிக்கப்பட்டிருக்கும் இறந்த மீன்களில் இருந்து வரும் துர்நாற்றம், சுவாசக்கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை உருவாக்குவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இந்தத் திருநீர்மலை பெரிய ஏரி தமிழக அரசின் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆரம்பகாலத்தில் 194 ஏக்கராக இருந்த இந்த ஏரியின் பரப்பளவு தொடர் ஆக்கிரமிப்பின் காரணமாக 146 ஏக்கராகக் குறைந்துள்ளது. தாம்பரம், சானடோரியம் மெப்ஸ் வளாகம், குரோம்பேட்டை, பல்லாவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்தத் திருநீர்மலை பெரிய ஏரியில் தான் கலந்து வருகிறது.

கழிவுநீர் கலப்பதால் ஏரி நீர் மாசடைந்திருப்பதோடு, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நிலத்தடி நீரின் தரமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆழ்வார்களால் பாடப்பட்ட இந்தப் பெரிய ஏரி நாசமடைவதை தடுத்து நிறுத்தி, தூர்வாரி தூய்மைப்படுத்த வேண்டும் என ஏரி பாதுகாப்பு குழுவினர் தொடர்ந்து போராடி வந்த நிலையில், 5.15 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணிகள் தொடங்கின.

ஏரியில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில், கொத்து கொத்தாகச் செத்து மிதக்கும் மீன்களால் அப்பகுதி முழுவதுமே துர்நாற்றம் வீசுவதாகப் புகார் எழுந்துள்ளது. ஏரியில் செத்து கிடந்த மீன்களை சேமித்து வைத்து அரைகுறையாகத் தோண்டப்பட்ட பள்ளங்களில் போட்டு மூடுவதாலும், கரையில் கொட்டப்பட்டிருக்கும் ஆகாயத் தாமரையின் கழிவுகளாலும் சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டிருப்பதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஐந்து மாதங்களுக்கு முன்பாகத் தொடங்கிய தூர்வாரும் பணி, மழைகாலம் தொடங்கும் நிலையிலும் மந்தகதியில் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஏரியைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் ஏரியை கடந்து செல்லும் மக்கள் மட்டுமல்லாது அருகில் உள்ள உணவகங்களிலும் யாரும் உணவருந்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஏரியை தூர்வாருகிறோம் எனும் பெயரில் கோடிக்கணக்கில் நிதியை ஒதுக்கிய நிலையிலும் அப்பணிகள் முடிக்கப்பெறாமல் இருப்பது பொதுமக்களை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கியுள்ளது.

விரைவில் மழைகாலம் தொடங்கவிருக்கும் நிலையில் தூர்வாரும் பணியை வேகப்படுத்துவதோடு, கரையோரம் குவித்து வைக்கப்பட்டிருக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Slow dredging work: Complaints that the large lake is emitting a foul odor due to wasteமந்த கதியில் துார்வாரும் பணிஏரி கழிவு
ShareTweetSendShare
Previous Post

முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் : அண்ணாமலை

Next Post

அபாயகரமாக காட்சியளிக்கும் ஆட்சியரகம் : நிதி ஒதுக்கியும் தொடங்காத பணிகள்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies