மந்த கதியில் துார்வாரும் பணி : பெரிய ஏரி கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதாக புகார்!
Sep 30, 2025, 12:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மந்த கதியில் துார்வாரும் பணி : பெரிய ஏரி கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதாக புகார்!

Web Desk by Web Desk
Sep 30, 2025, 10:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பல்லாவரம் அருகே அமைந்திருக்கும் திருநீர்மலை பெரிய ஏரியைத் தூர்வாரும் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது. ஏரியைச் சுற்றி குவிக்கப்பட்டிருக்கும் இறந்த மீன்களில் இருந்து வரும் துர்நாற்றம், சுவாசக்கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை உருவாக்குவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இந்தத் திருநீர்மலை பெரிய ஏரி தமிழக அரசின் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆரம்பகாலத்தில் 194 ஏக்கராக இருந்த இந்த ஏரியின் பரப்பளவு தொடர் ஆக்கிரமிப்பின் காரணமாக 146 ஏக்கராகக் குறைந்துள்ளது. தாம்பரம், சானடோரியம் மெப்ஸ் வளாகம், குரோம்பேட்டை, பல்லாவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்தத் திருநீர்மலை பெரிய ஏரியில் தான் கலந்து வருகிறது.

கழிவுநீர் கலப்பதால் ஏரி நீர் மாசடைந்திருப்பதோடு, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நிலத்தடி நீரின் தரமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆழ்வார்களால் பாடப்பட்ட இந்தப் பெரிய ஏரி நாசமடைவதை தடுத்து நிறுத்தி, தூர்வாரி தூய்மைப்படுத்த வேண்டும் என ஏரி பாதுகாப்பு குழுவினர் தொடர்ந்து போராடி வந்த நிலையில், 5.15 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணிகள் தொடங்கின.

ஏரியில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில், கொத்து கொத்தாகச் செத்து மிதக்கும் மீன்களால் அப்பகுதி முழுவதுமே துர்நாற்றம் வீசுவதாகப் புகார் எழுந்துள்ளது. ஏரியில் செத்து கிடந்த மீன்களை சேமித்து வைத்து அரைகுறையாகத் தோண்டப்பட்ட பள்ளங்களில் போட்டு மூடுவதாலும், கரையில் கொட்டப்பட்டிருக்கும் ஆகாயத் தாமரையின் கழிவுகளாலும் சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டிருப்பதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஐந்து மாதங்களுக்கு முன்பாகத் தொடங்கிய தூர்வாரும் பணி, மழைகாலம் தொடங்கும் நிலையிலும் மந்தகதியில் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஏரியைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் ஏரியை கடந்து செல்லும் மக்கள் மட்டுமல்லாது அருகில் உள்ள உணவகங்களிலும் யாரும் உணவருந்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஏரியை தூர்வாருகிறோம் எனும் பெயரில் கோடிக்கணக்கில் நிதியை ஒதுக்கிய நிலையிலும் அப்பணிகள் முடிக்கப்பெறாமல் இருப்பது பொதுமக்களை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கியுள்ளது.

விரைவில் மழைகாலம் தொடங்கவிருக்கும் நிலையில் தூர்வாரும் பணியை வேகப்படுத்துவதோடு, கரையோரம் குவித்து வைக்கப்பட்டிருக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Slow dredging work: Complaints that the large lake is emitting a foul odor due to wasteமந்த கதியில் துார்வாரும் பணிஏரி கழிவு
ShareTweetSendShare
Previous Post

கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் – வதந்தி பரப்பியதாக ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது!

Next Post

விஜய்யை கைது செய்ய வேண்டும் : உங்களில் ஒருவன் அமைப்பின் தலைவர் அறிவழகன்!

Related News

தஞ்சை : தேசிய நெடுஞ்சாலையில் சடலத்தை வைத்து உறவினர்கள் போராட்டம்!

வேலூர் : போலீசார் கண்முன்னே தாக்கிக் கொண்ட தவெக மற்றும் திமுகவினர்!

திண்டுக்கல் : செல்போன் கடையில் திருட்டு – போலீசார் விசாரணை!

மனு அளித்து 7 ஆண்டுகள் ஆகியும் வீடு கட்டித்தரவில்லை என முதியவர் தர்ணா

செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 40 பேரை கட்சி பதவியில் இருந்து நீக்கம் – அதிமுக

இடிக்கப்பட்ட கோயிலை அதே இடத்தில் கட்டித்தரக் கோரி ஆட்சியரிடம் மனு

Load More

அண்மைச் செய்திகள்

‘தாதாசாகேப் பால்கே’ மோகன்லாலுக்கு அக். 4ல் பாராட்டு விழா!

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவையொட்டி மலர் கண்காட்சி!

அரசியல் கட்சிகள் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை சமர்ப்பிக்க ஆணை- தேர்தல் ஆணையம்!

திருச்செந்தூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு வேடமிட்டு கொலு கண்காட்சி!

சேலம் : சரக்கு லாரி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து!

கரூர் துயர சம்பவம் எதிரொலி : விஜய்யின் இல்லத்தில் 3வது நாளாக போலீசார் பாதுகாப்பு!

முதலமைச்சர் ஸ்டாலினிடம் இபிஎஸ் கேள்வி!

பச்சிம் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தனியாக கழன்றதால் பயணிகள் பீதி!

ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலம் : தங்க ரதத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி!

விஜய்யை கைது செய்ய வேண்டும் : உங்களில் ஒருவன் அமைப்பின் தலைவர் அறிவழகன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies