மந்த கதியில் துார்வாரும் பணி : பெரிய ஏரி கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதாக புகார்!
Aug 31, 2026, 05:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மந்த கதியில் துார்வாரும் பணி : பெரிய ஏரி கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதாக புகார்!

Murugesan M by Murugesan M
Sep 30, 2025, 06:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை பல்லாவரம் அருகே அமைந்திருக்கும் திருநீர்மலை பெரிய ஏரியைத் தூர்வாரும் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது. ஏரியைச் சுற்றி குவிக்கப்பட்டிருக்கும் இறந்த மீன்களில் இருந்து வரும் துர்நாற்றம், சுவாசக்கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை உருவாக்குவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இந்தத் திருநீர்மலை பெரிய ஏரி தமிழக அரசின் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆரம்பகாலத்தில் 194 ஏக்கராக இருந்த இந்த ஏரியின் பரப்பளவு தொடர் ஆக்கிரமிப்பின் காரணமாக 146 ஏக்கராகக் குறைந்துள்ளது. தாம்பரம், சானடோரியம் மெப்ஸ் வளாகம், குரோம்பேட்டை, பல்லாவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்தத் திருநீர்மலை பெரிய ஏரியில் தான் கலந்து வருகிறது.

கழிவுநீர் கலப்பதால் ஏரி நீர் மாசடைந்திருப்பதோடு, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நிலத்தடி நீரின் தரமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆழ்வார்களால் பாடப்பட்ட இந்தப் பெரிய ஏரி நாசமடைவதை தடுத்து நிறுத்தி, தூர்வாரி தூய்மைப்படுத்த வேண்டும் என ஏரி பாதுகாப்பு குழுவினர் தொடர்ந்து போராடி வந்த நிலையில், 5.15 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணிகள் தொடங்கின.

ஏரியில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில், கொத்து கொத்தாகச் செத்து மிதக்கும் மீன்களால் அப்பகுதி முழுவதுமே துர்நாற்றம் வீசுவதாகப் புகார் எழுந்துள்ளது. ஏரியில் செத்து கிடந்த மீன்களை சேமித்து வைத்து அரைகுறையாகத் தோண்டப்பட்ட பள்ளங்களில் போட்டு மூடுவதாலும், கரையில் கொட்டப்பட்டிருக்கும் ஆகாயத் தாமரையின் கழிவுகளாலும் சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டிருப்பதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஐந்து மாதங்களுக்கு முன்பாகத் தொடங்கிய தூர்வாரும் பணி, மழைகாலம் தொடங்கும் நிலையிலும் மந்தகதியில் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஏரியைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் ஏரியை கடந்து செல்லும் மக்கள் மட்டுமல்லாது அருகில் உள்ள உணவகங்களிலும் யாரும் உணவருந்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஏரியை தூர்வாருகிறோம் எனும் பெயரில் கோடிக்கணக்கில் நிதியை ஒதுக்கிய நிலையிலும் அப்பணிகள் முடிக்கப்பெறாமல் இருப்பது பொதுமக்களை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கியுள்ளது.

விரைவில் மழைகாலம் தொடங்கவிருக்கும் நிலையில் தூர்வாரும் பணியை வேகப்படுத்துவதோடு, கரையோரம் குவித்து வைக்கப்பட்டிருக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Slow dredging work: Complaints that the large lake is emitting a foul odor due to wasteமந்த கதியில் துார்வாரும் பணிஏரி கழிவு
Share
Tweet
SendShare
Previous Post

முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் : அண்ணாமலை

Next Post

அபாயகரமாக காட்சியளிக்கும் ஆட்சியரகம் : நிதி ஒதுக்கியும் தொடங்காத பணிகள்!

Related News

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

சேலம் ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

நேபாள வெள்ளம் – அடையாளம் தெரியாத உடல்களின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்க முடிவு!

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

அதுவும் கொள்ளை தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

லஞ்சம் கேட்கும் பணியாளர் மீது உடனடி நடவடிக்கை – அமைச்சர் வெங்கட ரமணன் எச்சரிக்கை!

வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் நோக்கம் – மோகன் பாகவத்

மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், மனிதநேயம் ஒன்றுதான் – மோகன் பாகவத்

உஸ்பெகிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies