நேபாளம் பெருவெள்ளத்தில் உயிரிழந்த அடையாளம் தெரியாத உடல்களை அடக்கம் செய்வதற்கு முன்பாக, அவற்றின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மீட்கப்படும் பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்குச் சிதைந்துள்ளதால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மீட்கப்படும் உடல்களை உடனடியாக அடக்கம் செய்ய நேபாள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், பிற்காலத்தில் குடும்பத்தினர் அடையாளம் காணும் வகையில், ஒவ்வொரு உடலின் டிஎன்ஏ மாதிரிகள், பிரத்யேக அடையாள எண்கள் மற்றும் விவரங்கள் முறையாகச் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட பிறகே அடக்கம் செய்யப்படும் என அந்நாட்டு பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார்.
















