பொறி வைத்து பிடித்த போலீசார் - ரயில் நிலையங்களில் கைவரிசை காட்டிய ஹவாரியாஸ்!
Jan 14, 2026, 01:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பொறி வைத்து பிடித்த போலீசார் – ரயில் நிலையங்களில் கைவரிசை காட்டிய ஹவாரியாஸ்!

Murugesan M by Murugesan M
Sep 30, 2025, 06:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கூடும் இடங்களை சாதகமாகப் பயன்படுத்தி விலையுயர்ந்த மொபைல்போன்களை திருடும் ஹவாரியாஸ் கும்பலை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். தீரன் அதிகாரம் ஒன்று திரைப்பட பாணியில் மேலும் பலரை கைது செய்ய ஜார்கண்டில் ரயில்வே பாதுகாப்பு படையினர் முகாமிட்டுள்ளனர்.

சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம், கரூர், காட்பாடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் ரயில் நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை பயன்படுத்தியும் நள்ளிரவு நேரங்களிலும் ஒரு திருட்டுக் கும்பல் தங்களின் கைவரிசையை காட்டி வந்தது. காவல்துறையே திணறும் அளவுக்குத் துல்லியமாகத் திட்டமிட்டு உயர்ந்த ரக மொபைல்போன்களை திருடுவதையே இக்கும்பல் வாடிக்கையாகக் கொண்டிருந்தது.

ரயில்நிலையங்களில் ஆங்காங்கே சிசிடிவி கேமிராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டதன் பயனாகத் திருட்டுக் கும்பல் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஹவாரியாஸ் கும்பல் எனத் தெரியவந்தது.

ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் அமைத்த தனிப்படை தன்னுடைய தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியதில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ்குமார், சிவக்குமார், ராஜத் மெக்டோ, ராகுல் சேக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்த 60 செல்போன்களையும் தனிப்படை பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட ஹவாரியாஸ் கொள்ளை கும்பலிடம் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் வெளிவந்துள்ளன. ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து விமானம் மூலமாக வந்து சேலம் உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் முகாமிட்டு மக்கள் அதிகமாகக்கூடும் இடங்களைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி விலை உயர்ந்த மொபைல் போன்களை திருடுவதையே தொழிலாகக் கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் திருடப்படும் மொபைல் போன்களை ஜார்கண்டுக்கு கொண்டு சென்று மென்பொருளில் மாற்றம் செய்து விற்பனை செய்துவிடுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. சேலத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த ஹாவாரியாஸ் கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது செய்திருக்கும் தனிப்படை மேலும் பலரை தேடி வருகிறது.

இந்த நால்வரின் மூலம் மேலும் பத்து பேரை கைது செய்ய ரயில்வே பாதுகாப்பு படையினர் ஜார்கண்டில் முகாமிட்டுள்ளனர். தமிழகத்தில் பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், அதனை சாதகமாகப் பயன்படுத்தி திருட்டுக் கும்பல் தங்களின் கைவரிசையை காட்டலாம் என்பதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என ரயில்வே பாதுகாப்பு படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags: சேலம்Police caught in a trap - Havarias showed off their skills at railway stationsபொறிவைத்து பிடித்த போலீசார்
ShareTweetSendShare
Previous Post

அபாயகரமாக காட்சியளிக்கும் ஆட்சியரகம் : நிதி ஒதுக்கியும் தொடங்காத பணிகள்!

Next Post

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies