பொறி வைத்து பிடித்த போலீசார் - ரயில் நிலையங்களில் கைவரிசை காட்டிய ஹவாரியாஸ்!
Nov 14, 2025, 08:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பொறி வைத்து பிடித்த போலீசார் – ரயில் நிலையங்களில் கைவரிசை காட்டிய ஹவாரியாஸ்!

Web Desk by Web Desk
Sep 30, 2025, 06:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கூடும் இடங்களை சாதகமாகப் பயன்படுத்தி விலையுயர்ந்த மொபைல்போன்களை திருடும் ஹவாரியாஸ் கும்பலை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். தீரன் அதிகாரம் ஒன்று திரைப்பட பாணியில் மேலும் பலரை கைது செய்ய ஜார்கண்டில் ரயில்வே பாதுகாப்பு படையினர் முகாமிட்டுள்ளனர்.

சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம், கரூர், காட்பாடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் ரயில் நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை பயன்படுத்தியும் நள்ளிரவு நேரங்களிலும் ஒரு திருட்டுக் கும்பல் தங்களின் கைவரிசையை காட்டி வந்தது. காவல்துறையே திணறும் அளவுக்குத் துல்லியமாகத் திட்டமிட்டு உயர்ந்த ரக மொபைல்போன்களை திருடுவதையே இக்கும்பல் வாடிக்கையாகக் கொண்டிருந்தது.

ரயில்நிலையங்களில் ஆங்காங்கே சிசிடிவி கேமிராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டதன் பயனாகத் திருட்டுக் கும்பல் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஹவாரியாஸ் கும்பல் எனத் தெரியவந்தது.

ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் அமைத்த தனிப்படை தன்னுடைய தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியதில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ்குமார், சிவக்குமார், ராஜத் மெக்டோ, ராகுல் சேக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்த 60 செல்போன்களையும் தனிப்படை பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட ஹவாரியாஸ் கொள்ளை கும்பலிடம் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் வெளிவந்துள்ளன. ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து விமானம் மூலமாக வந்து சேலம் உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் முகாமிட்டு மக்கள் அதிகமாகக்கூடும் இடங்களைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி விலை உயர்ந்த மொபைல் போன்களை திருடுவதையே தொழிலாகக் கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் திருடப்படும் மொபைல் போன்களை ஜார்கண்டுக்கு கொண்டு சென்று மென்பொருளில் மாற்றம் செய்து விற்பனை செய்துவிடுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. சேலத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த ஹாவாரியாஸ் கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது செய்திருக்கும் தனிப்படை மேலும் பலரை தேடி வருகிறது.

இந்த நால்வரின் மூலம் மேலும் பத்து பேரை கைது செய்ய ரயில்வே பாதுகாப்பு படையினர் ஜார்கண்டில் முகாமிட்டுள்ளனர். தமிழகத்தில் பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், அதனை சாதகமாகப் பயன்படுத்தி திருட்டுக் கும்பல் தங்களின் கைவரிசையை காட்டலாம் என்பதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என ரயில்வே பாதுகாப்பு படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags: பொறிவைத்து பிடித்த போலீசார்சேலம்Police caught in a trap - Havarias showed off their skills at railway stations
ShareTweetSendShare
Previous Post

அபாயகரமாக காட்சியளிக்கும் ஆட்சியரகம் : நிதி ஒதுக்கியும் தொடங்காத பணிகள்!

Next Post

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

Related News

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் ஏவிய ப்ளூ ஆரிஜின்!

புதுச்சேரி : காவல்துறை அதிகாரிகள் கள் குடித்துவிட்டு நடனம்?

சென்னை : தனியார் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் ஆர்ப்பாட்டம்!

சென்னை : ஒரே நாளில் இருமுறை குறைந்த தங்கத்தின் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies