5 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா – சீனா இடையே நேரடி விமான சேவை தொடங்க இருப்பது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019 இல் லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் அத்துமீறித் தாக்குதல் நடத்தி இந்திய வீரர்கள் 20 பேரை கொன்றனர்.
இதனால் இரு நாடுகளிடையே விரிசல் வலுப்பெற்றது. எல்லை பிரச்சனைகள் மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியா – சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. அதன்படி இந்தச் சேவை வரும் 26 முதல் தொடங்கும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாகக் கூறி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு 50 சதவீதம் கூடுதல் வரி விதித்த பிறகு இந்தியா-சீனா உறவு வலுப்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.