இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?
Mar 15, 2026, 10:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

Murugesan M by Murugesan M
Oct 3, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூடப்படவிருந்த அரசுப் பள்ளி ஒன்று, சர்வதேச அளவில் சிறந்த பள்ளிக்கான விருதை வென்று சாதித்துள்ளது. குறிப்பிட்ட அரசுப் பள்ளி எங்கு உள்ளது. சாதித்து காட்டியது எப்படி என்பதை தற்போது பார்க்கலாம்.

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் கேட் தாலுகாவில் உள்ள ஜலிந்தர்நகர் ஜில்லா பரிஷத் பள்ளிதான் T4 கல்வி அமைப்பால் கௌரவிக்கப்பட்ட இந்தியாவின் ஒரே அரசுப் பள்ளி என்று அங்கீகாரத்தை பெற்றுள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை மூன்றாகக் குறைந்தது. மாநில விதிமுறைகளின்படி 10-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் மூடப்படுவது வழக்கமான நடைமுறைதான்.

அப்படித்தான் இந்தப் பள்ளியும் மூடு விழாவை நோக்கிய பயணத்தை எதிர்கொண்டது…எனினும் உள்ளூர் சமூகத்தின் ஒத்துழைப்பு, தொலைநோக்கு திட்டங்கள் கைகொடுக்க, மூடுவிழாவில் இருந்து தப்பிப்பிழைத்த இந்தப் பள்ளி, விதையில் இருந்து விருட்சமாகச் செழித்து வளரத் தொடங்கியது.

இங்கு 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்புவரை 120 மாணவர்கள் படித்து வரும் நிலையில், கற்பித்தலில் புதுமை, சமூக தாக்கம் மற்றும் மாணவர்களுக்கு ஏற்ற நடைமுறைகளுக்காகச் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளது இந்தப் பள்ளி.. உலகளவில் 50 பள்ளிகள் T4 கல்வி அமைப்பால் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவையனைத்தையும் பின்னுக்கு தள்ளி, Global Community Choice விருதை வென்று நம் முன் நிற்கிறது. இதன் மூலம் ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தை உலகளவில் ஊக்குவிக்கும் T4 கல்வி அமைப்பின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.

குறிப்பாக மூத்த மாணவர்கள், இளைய மாணவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் ஒருவருக்கொருவர் தங்களுக்கே கற்பித்துக் கொள்ளும் பாங்கும், வகுப்பறையில் கற்பிக்கப்பட்டதை பிற மாணவர்களுடன் கலந்துரையாடும் தன்மையும், இந்த அரசுப் பள்ளியைத் தனித்துவமாக அடையாளப்படுத்தியதால் சர்வதேச விருது தேடி வந்துள்ளது. விருது பெற்ற அரசுப் பள்ளியைப் பாராட்டியுள்ள மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார், இந்தச் சாதனை மகாராஷ்டிராவிற்கு பெருமையான தருணம் என்று கூறியிருக்கிறார்.

ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் ஒருங்கிணைந்த முயற்சியால், பள்ளி மாநிலத்திற்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் முன்மாதிரியாக மாறியிருப்பதாகவும் அவர் பெருமிதத்துடன் கூறியிருக்கிறார்.

பெற்றோர், ஆசிரியர்கள், கிராம மக்கள், சமூக தன்னார்வலர்கள் மற்றும் பலரின் கூட்டு முயற்சியால் பள்ளிக்குக் கௌரவம் கிடைத்திருப்பதாகக் கூறுகிறார் பள்ளி முதல்வர் Dattatray Ware…எந்தவொரு சமூகத் திட்டமும் வெற்றிபெற, நம்பிக்கை முக்கியமானது என்றும், நேர்மையான, தன்னலமற்ற பணிகளில் இருந்து மட்டுமே நம்பிக்கை பிறப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். ஒரு சமுதாயம் நினைத்தால், இது போன்ற பள்ளிகள் எளிதாக உச்சத்தை தொட முடியும் என்பதற்கு புனேவில் உள்ள புரட்சிப் பள்ளியே சான்று.

Tags: A government school that was about to be closed: How did it become the best school in the world?இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளிஉலகின் சிறந்த பள்ளிபள்ளி
ShareTweetSendShare
Previous Post

அரிச்சுவடி ஆரம்பம்!

Next Post

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies