புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!
Jul 28, 2026, 09:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

Murugesan M by Murugesan M
Oct 3, 2025, 08:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் பாணியில், புலம் பெயர்ந்தோரை கட்டுப்படுத்தும் வகையில், பிரிட்டன் புதிய கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது. இது பிரிட்டனில் வாழ்விடம் தேடி அகதிகளாகத் தஞ்சமடைவோருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் வெளிநாட்டினரை வெளியேற்றவும், அமெரிக்கர்களை முன்னிலைபடுத்தவும் அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டுவந்த கட்டுப்பாடுகள், புலம் பெயர்ந்தவர்களை கடுமையாகப் பாதித்தது. தற்போது அதே பாணியைப் பிரிட்டனும் கையில் எடுத்திருக்கிறது. குடியேற்றக் கொள்கையைக் கடுமையாக்கியுள்ள பிரிட்டன், பிரான்சிலிருந்து படகுகளில் சட்டவிரோதமாகக் குடியேறும் மக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது.

புலம் பெயர்ந்தவர்கள் பிரிட்டனில் நிரந்தரமாக வசிக்கும் உரிமையைப் பெறுவதற்கான தகுதி காலம் இதுவரை 5 ஆண்டுகளாக இருந்த நிலையல், தற்போது 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய விதிகளின்படி, பிரிட்டனில் 5 ஆண்டுகள் வாழ்ந்தால் நிரந்தர குடியுரிமை வழங்கப்படுவதோடு, தங்களது குடும்பத்தினரையும் அழைத்து வரும் உரிமையும் வழங்கப்படும்.

இந்த நடைமுறைக்குத் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ள பிரிட்டன், அதற்கான விண்ணப்பத்தையும் நிறுத்திவிட்டது. 10 ஆண்டுகளுக்குப் பின் நிரந்தர குடியுரிமை பெறுபவர்கள், குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும், ஆங்கிலம் சரளமாகப் பேச வேண்டும், வழக்குகள் இருக்கக் கூடாது, பிரிட்டனுக்கான அவர்களது பங்களிப்பும் கருத்தில் கொள்ளப்படும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் அகதிகளாகத் தஞ்சமடைபவர்கள் அமெரிக்கா பொன்று நாடு கடத்தப்பட மாட்டார்கள் என்றும், அவர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு உரிமைகள் வழங்கப்படும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியின்போது, கட்டுப்பாடற்ற குடியேற்றங்கள் அதிகரித்ததாகக் குற்றம்சாட்டிய பிரிட்டன் அரசு, குடியேற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டது.

மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்பை முடித்தபின்னர் பிரிட்டனில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருக்க முன்பு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்தக் கால அவகாசம் தற்போது 18 மாதங்களாகக் குறைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கடுமையான விசா விதிமுறைகள் இல்லாவிட்டால், பிரிட்டன் அந்நியர்களின் தீவாக மாறிவிடக்கூடிய அபாயம் இருப்பதாகவும், கல்வி, வேலை, குடும்பம் எனக் குடியேற்றம் தொடர்பான எல்லா அம்சங்களிலும் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டால்தான் அரசின் கையில் கூடுதல் அதிகாரம் இருக்கும் என்றும் பிரிட்டன் அரசு நம்புகிறது.

இந்நிலையில், புதிய குடியேற்ற விதிகள், இந்தியாவிலிருந்து செல்லும் மாணவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்திருக்கிறது.

Tags: LondonNew restrictions on migrants: Britain tightens gripUS-styleஅமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்Brittan
ShareTweetSendShare
Previous Post

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

Next Post

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

இந்தியாவின் முதல் காலியம் நைட்ரைடு (GaN) சிப் : சாதித்த இந்திய ஆராய்ச்சியாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

விஸ்வரூபம் எடுக்கும் வினாத்தாள் கசிவு விவகாரம் : பஞ்சாப் அமைச்சர்கள் பதவி விலக போர்க்கொடி – சிறப்பு தொகுப்பு!

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies