தண்ணீர் நெருக்கடி - மின்சார பற்றாக்குறை - திணறும் ஈரான் ஆட்சி - மாற்றத்துக்கு போராடும் மக்கள்!
Jan 14, 2026, 09:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

Murugesan M by Murugesan M
Oct 7, 2025, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தலைநகரை தெஹ்ரானில் இருந்து, ஓமன் வளைகுடா அருகே உள்ள கடலோர பகுதிக்கு மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மீண்டும் தெரிவித்துள்ளார். ஈரான் தனது தலைநகரை மாற்றுவதற்குப் பின்னணி என்ன என்பது குறித்து ஒரு செய்தி தொகுப்பு.

அல்போர்ஸ் மலைத்தொடரின் அடிவாரத்தில், பாரசீக நாகரிகத்தின் தொட்டிலாகக் கம்பீரமாக காட்சியளிக்கும் தெஹ்ரானில் 1.8 கோடி பேர் வசிக்கிறார்கள். இது தவிர சுமார் 20 லட்சம் பேர் தினசரி தெஹ்ரானுக்கு வந்து செல்கிறார்கள் என்றும் கூறப் படுகிறது.

1979-ல் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு, தலைநகரை தெஹ்ரானிலிருந்து மாற்ற வேண்டும் என்று பலமுறை திட்டமிடப் பட்டாலும், நிதி நெருக்கடி காரணமாகத் தலைநகரை மாற்றும் யோசனையை ஈரான் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தது. இந்தச் சூழலில் கடந்த ஆண்டு, அதிபர் மசூத் பெஷேஷ்கியன் தலைநகரை மாற்றும் திட்டத்தை மீண்டும் முன்வைத்தார்.

பல ஆண்டுகளாகவே ஈரான் கடுமையான தண்ணீர் மற்றும் மின்சார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. ஈரானின் பாதிக்கும் மேற்பட்ட அணைகள் 40 சதவீதத்துக்கும் குறைவான கொள்ளளவு தண்ணீரையே கொண்டுள்ளன. மின் உற்பத்தி நிலையங்கள் சிதைந்து விட்டன. ஒரு நாளைக்குப் பல மணிநேர மின் தடைகள் கட்டாயமாகி விட்டன.இதனால் ஈரானில் அன்றாட வாழ்க்கையையும் தொழில்துறையையும் பெரிய அளவில் பாதிக்கப் பட்டுள்ளன. தண்ணீர் பற்றாக்குறை, மின்சாரத் தட்டுப்பாடு, தீவிர காற்று மாசுபாடு ஆகியவற்றோடு தெஹ்ரானின் நிலம் மெல்லச் சரிந்து வருவது மிகப் பெரிய சவாலாக உள்ளது.

இந்த நிலச்சரிவுகள் எப்போது வேண்டுமானாலும் மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. எனவேதான் தலைநகரை மாற்றும் முடிவை ஈரான் அதிபர் அந்நாட்டின் உச்சத் தலைவர் அயதுல்லா கொமேனியிடம் தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு தெஹ்ரானின் 60 சதவீத கட்டிடங்கள் நிலநடுக்கப் பாதுகாப்பு தரநிலைகளை பூர்த்தி செய்யவில்லை என்று கூறியுள்ள ஈரானின் கட்டுமான மற்றும் வீட்டுவசதி ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெஹ்ரானில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 10 அங்குலம் மண் புதைவதாகக் கண்டறிந்துள்ளனர்.

அதனால், இதனால் நகர உள்கட்டமைப்பு பணிகள் கிட்டத்தட்ட நிறைவேற்ற முடியாமல் போகிறது. மேலும், தொடர்ச்சியாக ஐந்து வறண்ட ஆண்டுகள் மற்றும் அதிக அளவிலான வெப்பத்திற்குப் பிறகு, தெஹ்ரானில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வரலாறு காணத அளவு குறைந்த அளவை எட்டியுள்ளது.

2022 ஆம் ஆண்டு முதல் காற்று மாசுபாட்டால் நாடு முழுவதும் ஆண்டுதோறும் 20,800 உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றும் தலைநகர் தெஹ்ரானில் மட்டும் 6,400 பேர் உயிரிழந்து வருவதாகவும் அந்நாட்டின் சுகாதார துறை தெரிவித்துள்ளது. தெஹ்ரானில் உயரமான குடியிருப்புகளிலிருந்து குஸிஸ்தான் மற்றும் சிஸ்தான்-பலுசிஸ்தான் கிராமங்கள் வரை, பொறுத்துக்கொள்ள முடியாத வகையில் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக தலைநகரின் முக்கியமான பகுதிகளில் அவசரகால நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

வீடுகளில் தண்ணீர் குழாய்கள் சுழற்சி முறையில் மூடப்படும் என்றும் தெருக்குழாய் மற்றும் தண்ணீர் லாரிகள் மூலம் அளவான தண்ணீர் விநியோகிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மழைப்பொழிவு சராசரியை விட 45 % குறைந்துள்ளது. பல மாகாணங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமாகக் குறைந்துள்ளது. மேலும், நிலத்தடி நீர் இருப்பில் 70 சதவீதத்துக்கும் அதிகமாகத் தீர்ந்துவிட்டதால் பல மாகாணங்களில் மண் புதைய ஆரம்பித்துள்ளது. நீர் பற்றாக்குறையின் விளைவாக ஈரான் எரிசக்தி நெருக்கடியையும் சந்தித்து வருகிறது.

கடந்த ஜூலையில் வடகிழக்கு ஈரான் உள்ளிட்ட ஈரானில் பல பகுதிகளில் மிகவும் கடுமையான நீர் மற்றும் மின்சார பற்றாக்குறைக்கு அரசும் அரசு அதிகாரிகளும் தான் காரணம் என்று மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வருகிறார்கள். 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தவறான ஆட்சி தங்களுக்கு வேண்டாம் என்றும், ஈரானின் மண்ணையும் நீரையும் அழிக்கும் ஒரு மதகுரு ஆட்சியைத் தாங்கள் விரும்ப வில்லை என்றும் மக்கள் கூறுகிறார்கள். கிணறுகளும் கால்வாய்களும் வறண்டு போவதால், சுற்றுச்சூழல் சார்ந்த இடப்பெயர்வு அதிகரித்து வருகிறது.

பல குடும்பங்கள் வேலைவாய்ப்பு, சேவைகள் மற்றும் சிறந்த உள்கட்டமைப்பைத் தேடி தெஹ்ரானுக்கு இடம் பெயர்கின்றன. இதனால் தெஹ்ரானின் மக்கள் தொகை பல மடங்கு அதிகரிக்கக்கூடும் என்றும் மதிப்பிடப் பட்டுள்ளது. ஈரானின் நீர், மின்சாரம் மற்றும் எதிர்காலத்தைப் பாதுகாக்க தலைநகரை மாற்றுவது சரியான முடிவில்லை என்றும் ஆட்சி மாற்றம் ஒன்றே நிரந்தர தீர்வாகும் என்றும் பெரும்பாலான ஈரான் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: IranWater crisis - electricity shortage - struggling Iranian regime - people fighting for changeதண்ணீர் நெருக்கடிதிணறும் ஈரான் ஆட்சி
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தானுக்கு BYE : வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள் – அமெரிக்காவிடம் அடகு போகும் பாகிஸ்தான்!

Next Post

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies