வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு - சிறப்பு தொகுப்பு!
Sep 12, 2026, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 7, 2025, 09:20 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தான் எல்லைகளில் ஏகே 630 வான் பாதுகாப்பு தளவாடத்தை நிலைநிறுத்த இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்.

இஸ்ரேலின், ‘அயர்ன் டோம்’ போல், இந்தியாவின் வான்பரப்பை பாதுகாக்க, ‘சுதர்சன சக்ரா’ திட்டம் தயாராகி வருகிறது. உள்நாட்டிலேயே மிகுந்த கவனத்துடன், பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்படும் இந்த வான் கவசம், 2035ல் முழு செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்ரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது, ரஷ்யாவிடம் இருந்து பெறப்பட்ட எஸ் – 400 வான் கவசம் நமக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தது. அதேசமயம், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘ஆகாஷ்தீர்’ கருவியும் எதிரிகளின் ஏவுகணைகளை பந்தாடின. எனினும், தற்போது உருவாக்கப்பட்டு வரும் சுதர்சன சக்ரா, ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு கவசத்தைவிட பன்மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என நம்பப்படுகிறது.

இந்நிலையில், சுதர்சன சக்ரா திட்டத்தின் ஒரு பகுதியாக, ஏகே 630 வான் பாதுகாப்பு தளவாடத்தை கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. Advanced Weapon and Equipment India Ltd நிறுவனத்திடம் இருந்து ஆறு ஏகே 630 தளவாடங்களை வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

ராணுவ கனரக வாகனங்களிலோ, போர்க்கப்பல்களிலோ பொருத்தப்பட்டிருக்கும் ஏகே 630 வான் பாதுகாப்பு தளவாடம், எதிரி நாட்டு இலக்குகளை சுழன்று சுழன்று தாக்கி அழிக்கும் திறன் படைத்தது. 4 கிலோ மீட்டர் தொலைதூரத்திற்குள் பறக்கும் ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகளை துல்லியமாக தாக்கும் ஏகே 630, ஒரே நிமிடத்திற்கு மூவாயிரம் துப்பாக்கி குண்டுகளை தீப்பொறி பறக்க வெளியேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்புத்துறை அதிகாரிகள், பஹல்காம் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக இருநாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போரில், இந்திய குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் குறிவைத்ததாகவும், இனிவரும் காலங்களில் அதற்கு முடிவு கட்டவே ஏகே 630-ஐ களமிறக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ள ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப், குஐராத் மாநிலங்களில் ஏகே 630 வான் பாதுகாப்பு தளவாடத்தை நிலைநிறுத்தி, எதிர்காலத்தில் பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் உறுதிப்பட தெரிவித்தனர்.

இதனிடையே இந்தியாவின் நடவடிக்கையால் தொடர்ச்சியாக அச்சத்தில் உள்ள பாகிஸ்தான், ஏகே 630 வான் பாதுகாப்பு தளவாடம் கொள்முதல் செய்யப்படும் செய்தி கேட்டு மேலும் அலற தொடங்கியுள்ளது. இனி ஒருமுறை வாலாட்டினாலும் பாகிஸ்தான் கதையை முடித்து விடுவோம் என கங்கணம் கட்டி செயல்படும் பாஜக அரசு, அதற்கான ராணுவ கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் தீவிரம் காட்டிவருகிறது.

Tags: Operation SindoorIsrael's Iron Dome.AK 630 air defense systems'Sudarshan Chakra' projectindian armyMinistry of Defense
Share
Tweet
SendShare
Previous Post

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

Next Post

அவமதிப்பா? நாடகமா? : குகேஷின் “கிங்”ஐ தூக்கி வீசிய அமெரிக்க வீரர்!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies