வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு - சிறப்பு தொகுப்பு!
Jul 29, 2026, 02:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 7, 2025, 09:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் எல்லைகளில் ஏகே 630 வான் பாதுகாப்பு தளவாடத்தை நிலைநிறுத்த இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்.

இஸ்ரேலின், ‘அயர்ன் டோம்’ போல், இந்தியாவின் வான்பரப்பை பாதுகாக்க, ‘சுதர்சன சக்ரா’ திட்டம் தயாராகி வருகிறது. உள்நாட்டிலேயே மிகுந்த கவனத்துடன், பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்படும் இந்த வான் கவசம், 2035ல் முழு செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்ரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது, ரஷ்யாவிடம் இருந்து பெறப்பட்ட எஸ் – 400 வான் கவசம் நமக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தது. அதேசமயம், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘ஆகாஷ்தீர்’ கருவியும் எதிரிகளின் ஏவுகணைகளை பந்தாடின. எனினும், தற்போது உருவாக்கப்பட்டு வரும் சுதர்சன சக்ரா, ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு கவசத்தைவிட பன்மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என நம்பப்படுகிறது.

இந்நிலையில், சுதர்சன சக்ரா திட்டத்தின் ஒரு பகுதியாக, ஏகே 630 வான் பாதுகாப்பு தளவாடத்தை கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. Advanced Weapon and Equipment India Ltd நிறுவனத்திடம் இருந்து ஆறு ஏகே 630 தளவாடங்களை வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

ராணுவ கனரக வாகனங்களிலோ, போர்க்கப்பல்களிலோ பொருத்தப்பட்டிருக்கும் ஏகே 630 வான் பாதுகாப்பு தளவாடம், எதிரி நாட்டு இலக்குகளை சுழன்று சுழன்று தாக்கி அழிக்கும் திறன் படைத்தது. 4 கிலோ மீட்டர் தொலைதூரத்திற்குள் பறக்கும் ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகளை துல்லியமாக தாக்கும் ஏகே 630, ஒரே நிமிடத்திற்கு மூவாயிரம் துப்பாக்கி குண்டுகளை தீப்பொறி பறக்க வெளியேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்புத்துறை அதிகாரிகள், பஹல்காம் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக இருநாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போரில், இந்திய குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் குறிவைத்ததாகவும், இனிவரும் காலங்களில் அதற்கு முடிவு கட்டவே ஏகே 630-ஐ களமிறக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ள ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப், குஐராத் மாநிலங்களில் ஏகே 630 வான் பாதுகாப்பு தளவாடத்தை நிலைநிறுத்தி, எதிர்காலத்தில் பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் உறுதிப்பட தெரிவித்தனர்.

இதனிடையே இந்தியாவின் நடவடிக்கையால் தொடர்ச்சியாக அச்சத்தில் உள்ள பாகிஸ்தான், ஏகே 630 வான் பாதுகாப்பு தளவாடம் கொள்முதல் செய்யப்படும் செய்தி கேட்டு மேலும் அலற தொடங்கியுள்ளது. இனி ஒருமுறை வாலாட்டினாலும் பாகிஸ்தான் கதையை முடித்து விடுவோம் என கங்கணம் கட்டி செயல்படும் பாஜக அரசு, அதற்கான ராணுவ கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் தீவிரம் காட்டிவருகிறது.

Tags: Ministry of DefenseOperation SindoorIsrael's Iron Dome.AK 630 air defense systems'Sudarshan Chakra' projectindian army
ShareTweetSendShare
Previous Post

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

Next Post

அவமதிப்பா? நாடகமா? : குகேஷின் “கிங்”ஐ தூக்கி வீசிய அமெரிக்க வீரர்!

Related News

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies