2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல் : நவ.6, 11-ல் வாக்குப் பதிவு - நவ.14-ல் வாக்கு எண்ணிக்கை!
Oct 6, 2025, 07:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல் : நவ.6, 11-ல் வாக்குப் பதிவு – நவ.14-ல் வாக்கு எண்ணிக்கை!

Web Desk by Web Desk
Oct 6, 2025, 06:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநில சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 22ம் தேதியுடன் முடிவடைவதை ஒட்டி இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பீகார் சட்டமன்றத் தேர்தலில் 7 கோடியே 43 லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதிபடைத்தவர்கள் என கூறினார்.

இவர்களில் ஆண்கள் 3 கோடியே 92 லட்சம் பேரும், பெண்கள் 3 கோடியே 50 லட்சம் பேரும் அடங்குவர் என அவர் குறிப்பிட்டார். மூன்றாம் பாலினத்தவர் ஆயிரத்து 725 பேர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்கள் என ஞானேஷ்குமார் குறிப்பிட்டார். இந்த தேர்தலில் முதன் முறை 14 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளதாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், பீகார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் எனத் தெரிவித்தார்.

பதிவான வாக்குகள் அனைத்தும் நவம்பர் 14-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.

அதன்படி முதல் கட்ட தேர்தலுக்கு வரும் 10-ம் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்கும் எனவும் வேட்பு மனுதாக்கலுக்கான கடைசி நாள் அக்டோபர் 17ம் தேதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நாளான அக்டோபர் 18ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை திரும்பப்பெற அக்டோபர் 20ம் தேதி கடைசி நாள் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதேபோல் பீகார் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் அக்டோபர் 13ம் தேதி தொடங்கும் எனக் குறிப்பிட்ட தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் அக்டோபர் 20ம் தேதி எனக் கூறினார்.

அதற்கு அடுத்த நாளான அக்டோபர் 21ம் தேதி வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறும் எனவும் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு அக்டோபர் 23ஆம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: இந்திய தலைமை தேர்தல் ஆணையர்Bihar electionBihar Assembly elections to be held in 2 phases: Voting on Nov. 6 and 11 - Counting of votes on Nov. 142 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல்
ShareTweetSendShare
Previous Post

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாதற்கு கண்டனம் : கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு சென்ற தலைமைச் செயலக ஊழியர்கள்!

Next Post

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

Related News

அவமதிப்பா? நாடகமா? : குகேஷின் “கிங்”ஐ தூக்கி வீசிய அமெரிக்க வீரர்!

எவரெஸ்ட்டில் கடும் பனிப்புயல் : 1000 பேரின் கதி என்ன? – சவாலானது மீட்புப் பணி!

கேன்சர் அறிகுறிகளை முன்பே கண்டறியலாம் : அறிமுகமாகும் புதிய ரத்த பரிசோதனை!

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

பனிப்புயலால் எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கி தவிக்கும் வீரர்கள்!

டெல்லி : கர்பா நடனமாடிய முதலமைச்சர் ரேகா குப்தா!

Load More

அண்மைச் செய்திகள்

2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல் : நவ.6, 11-ல் வாக்குப் பதிவு – நவ.14-ல் வாக்கு எண்ணிக்கை!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாதற்கு கண்டனம் : கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு சென்ற தலைமைச் செயலக ஊழியர்கள்!

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு பணியாளர் சங்கம் போராட்டம்!

நேபாளத்தில் நிலச்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஆக உயர்வு!

திருச்சியில் 10 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்!

அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

காசா கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க மறுத்தால் ஹமாஸ் அழிக்கப்படும் – அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

திமுக அரசை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் – தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு!

ஆளுநரை சீண்டும் வகையில் முதலமைச்சர் செயல்படுவது நல்லதல்ல – அண்ணாமலை

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சுட்டுக் கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies