2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல் : நவ.6, 11-ல் வாக்குப் பதிவு - நவ.14-ல் வாக்கு எண்ணிக்கை!
Jan 14, 2026, 08:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல் : நவ.6, 11-ல் வாக்குப் பதிவு – நவ.14-ல் வாக்கு எண்ணிக்கை!

Murugesan M by Murugesan M
Oct 6, 2025, 06:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநில சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 22ம் தேதியுடன் முடிவடைவதை ஒட்டி இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பீகார் சட்டமன்றத் தேர்தலில் 7 கோடியே 43 லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதிபடைத்தவர்கள் என கூறினார்.

இவர்களில் ஆண்கள் 3 கோடியே 92 லட்சம் பேரும், பெண்கள் 3 கோடியே 50 லட்சம் பேரும் அடங்குவர் என அவர் குறிப்பிட்டார். மூன்றாம் பாலினத்தவர் ஆயிரத்து 725 பேர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்கள் என ஞானேஷ்குமார் குறிப்பிட்டார். இந்த தேர்தலில் முதன் முறை 14 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளதாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், பீகார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் எனத் தெரிவித்தார்.

பதிவான வாக்குகள் அனைத்தும் நவம்பர் 14-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.

அதன்படி முதல் கட்ட தேர்தலுக்கு வரும் 10-ம் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்கும் எனவும் வேட்பு மனுதாக்கலுக்கான கடைசி நாள் அக்டோபர் 17ம் தேதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நாளான அக்டோபர் 18ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை திரும்பப்பெற அக்டோபர் 20ம் தேதி கடைசி நாள் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதேபோல் பீகார் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் அக்டோபர் 13ம் தேதி தொடங்கும் எனக் குறிப்பிட்ட தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் அக்டோபர் 20ம் தேதி எனக் கூறினார்.

அதற்கு அடுத்த நாளான அக்டோபர் 21ம் தேதி வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறும் எனவும் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு அக்டோபர் 23ஆம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: இந்திய தலைமை தேர்தல் ஆணையர்Bihar electionBihar Assembly elections to be held in 2 phases: Voting on Nov. 6 and 11 - Counting of votes on Nov. 142 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல்
ShareTweetSendShare
Previous Post

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாதற்கு கண்டனம் : கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு சென்ற தலைமைச் செயலக ஊழியர்கள்!

Next Post

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies