2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல் : நவ.6, 11-ல் வாக்குப் பதிவு - நவ.14-ல் வாக்கு எண்ணிக்கை!
Mar 15, 2026, 02:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல் : நவ.6, 11-ல் வாக்குப் பதிவு – நவ.14-ல் வாக்கு எண்ணிக்கை!

Murugesan M by Murugesan M
Oct 6, 2025, 06:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநில சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 22ம் தேதியுடன் முடிவடைவதை ஒட்டி இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பீகார் சட்டமன்றத் தேர்தலில் 7 கோடியே 43 லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதிபடைத்தவர்கள் என கூறினார்.

இவர்களில் ஆண்கள் 3 கோடியே 92 லட்சம் பேரும், பெண்கள் 3 கோடியே 50 லட்சம் பேரும் அடங்குவர் என அவர் குறிப்பிட்டார். மூன்றாம் பாலினத்தவர் ஆயிரத்து 725 பேர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்கள் என ஞானேஷ்குமார் குறிப்பிட்டார். இந்த தேர்தலில் முதன் முறை 14 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளதாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், பீகார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் எனத் தெரிவித்தார்.

பதிவான வாக்குகள் அனைத்தும் நவம்பர் 14-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.

அதன்படி முதல் கட்ட தேர்தலுக்கு வரும் 10-ம் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்கும் எனவும் வேட்பு மனுதாக்கலுக்கான கடைசி நாள் அக்டோபர் 17ம் தேதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நாளான அக்டோபர் 18ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை திரும்பப்பெற அக்டோபர் 20ம் தேதி கடைசி நாள் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதேபோல் பீகார் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் அக்டோபர் 13ம் தேதி தொடங்கும் எனக் குறிப்பிட்ட தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் அக்டோபர் 20ம் தேதி எனக் கூறினார்.

அதற்கு அடுத்த நாளான அக்டோபர் 21ம் தேதி வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறும் எனவும் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு அக்டோபர் 23ஆம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: இந்திய தலைமை தேர்தல் ஆணையர்Bihar electionBihar Assembly elections to be held in 2 phases: Voting on Nov. 6 and 11 - Counting of votes on Nov. 142 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல்
ShareTweetSendShare
Previous Post

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாதற்கு கண்டனம் : கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு சென்ற தலைமைச் செயலக ஊழியர்கள்!

Next Post

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

தமிழகத்தில் தேசிய ஹோமியோபதி நிறுவனம் அமைக்க மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை – மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies