நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்த வீடுகள் - அழகான டார்ஜிலிங் - அலங்கோலமான அவலம்!
Jan 14, 2026, 08:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்த வீடுகள் – அழகான டார்ஜிலிங் – அலங்கோலமான அவலம்!

Murugesan M by Murugesan M
Oct 7, 2025, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்குவங்கத்தில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் டார்ஜிலிங் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது.. நிலச்சரிவால் வீடுகள் மண்ணில் புதைந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

கண்ணில் பட்டதையெல்லாம் வாரிச்சுருட்டிச் சென்ற காட்டாற்று வெள்ளம். நிலச்சரிவால் சிதைந்து போன சாலைகள்… வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலங்கள் என மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் இயற்கையின் கொடூமான சீற்றத்திற்கு பலியாகியுள்ளது.

இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவால் இமயமலையை ஒட்டியுள்ள மலை பிரதேசங்களான டார்ஜிலிங், கலிம்போங், கூச்பெஹார், ஜல்பைகுரி போன்ற பகுதிகள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.

வீடுகள், வாகனங்கள் மண்ணில் புதைந்துள்ளன. நிலச்சரிவால் மண்ணில் புதைந்து கிடக்கும் உடல்கள் அடுத்தடுத்து மீட்கப்படுவது பெரும் துயரத்தை தருகிறது. பலரது நிலை என்னவென்று தெரியாத நிலையில் உறவினர்கள் விழிபிதுங்கியுள்ளனர்.

டார்ஜிலிங்கின் மிரிக் – சுகியேபாக்ரி மலைச்சாலையில் நிலச்சரிவால் போக்குவரத்து முடங்கிப்போயுள்ளது. தொலைதொடர்பு சேவைகள், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தசரா விடுமுறையை கழிக்க டார்ஜிலிங் பகுதிக்குச் சுற்றுலா சென்ற பலர் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

அலிப்பூர்துவார் மாவட்டத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு சரணாலயமான ஜல்தபரா தேசிய பூங்காவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது… தோர்சா நதியில் காண்டாமிருகங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகளையும், கரையேறிய காண்டாமிருகத்தை மக்கள் துரத்துவதையும் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.

ஒற்றை கொம்பு காண்டாமிருகங்களின் தாயகமான ஜல்தபாரா தேசிய பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்கான குடில்கள், மரப்பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்கள் கும்கி யானைகள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 160-க்கும் மேற்பட்டோர் படகுகள் மூலமும், கயிறு கட்டியும் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் டெல்லி, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் போன்ற மாநிலங்களில் வெள்ளம் புரட்டிப்போட்டிருந்தது.

தற்போது மேற்குவங்க மாநிலத்தை இயற்கை பேரிடர் சூழ்ந்துள்ளது… டார்ஜிலிங் நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் பிரதமர் மோடி, கனமழை, நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள டார்ஜிலிங் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கள நிலவரம் பற்றி உன்னிப்பாகக் கவனித்து வருவதாகக் கூறியிருக்கிறார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவியையும் வழங்க மத்திய அரசு கடமைப்பட்டுள்ளதாகவும் நம்பிக்கையை விதைத்திருக்கிறார்… நிவாரண பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ள நிலையில்,. விரைவில் அங்கு இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: NEWS TODAYflood newsHouses buried in landslide - beautiful Darjeeling - a messy tragedy
ShareTweetSendShare
Previous Post

4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள மயிலாடும்பாறை வியூ பாயிண்ட் : விரைந்து திறக்க பொதுமக்கள் வலியுறுத்தல்!

Next Post

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத திமுக ஆட்சிதான் பொற்கால ஆட்சியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies