4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள மயிலாடும்பாறை வியூ பாயிண்ட் : விரைந்து திறக்க பொதுமக்கள் வலியுறுத்தல்!
Jul 28, 2026, 09:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள மயிலாடும்பாறை வியூ பாயிண்ட் : விரைந்து திறக்க பொதுமக்கள் வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Oct 7, 2025, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொடைக்கானல் அருகே 4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள மயிலாடும்பாறை வியூ பாயிண்ட்டை திறக்க வேண்டும் எனச் சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்..

மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருவது வழக்கம். விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகள் வருகை பல மடங்கு அதிகரிக்கும்.

வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தொடர்ந்து கொடைக்கானலுக்கு பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வரும் பயணிகளின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக, மயிலாடும்பாறை வியூ பாயிண்ட் இருந்து வந்தது.

வத்தலகுண்டு – கொடைக்கானல் பிரதான மலை சாலையில் மச்சூர் அருகே அமைந்துள்ள அந்த வியூ பாயிண்ட் கொரோனா காலத்தின்போது மூடப்பட்டது. இதனால், கடந்த நான்கு வருடங்களாக அங்கு செல்லப் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வத்தலகுண்டு – கொடைக்கானல் மலைச்சாலை சுமார் 67 கிலோ மீட்டர் நீளமுள்ள நிலையில், இச்சாலையில் பயணிக்கும் மக்கள் மயிலாடும்பாறை வியூ பாயிண்ட் பகுதியில் இளைப்பாறி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

மேலும், அங்கு இயற்கை எழிலை கண்டு ரசித்தும், குடும்பத்துடன் நேரம் செலவிட்டும், புகைப்படம் எடுத்தும் மகிழந்து வந்தனர். இதனால், அப்பகுதியில் ஏற்படும் வாகன விபத்துகளின் எண்ணிக்கை குறைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மயிலாடும்பாறை வியூ பாயிண்ட் தொடர்ந்து மூடப்பட்டே இருப்பது சுற்றுலா பயணிகளை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. எனவே, அதனை மீண்டும் திறக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இப்பூங்காவை திறப்பதினால் அரசுக்கும் வருவாய் கிடைக்கும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மேலும் சில சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளதாகவும், அவற்றையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags: Public urges urgent reopening of Mayiladumbarai View Pointwhich has been closed for 4 yearsமயிலாடும்பாறை வியூ பாயிண்ட்
ShareTweetSendShare
Previous Post

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தருமபுரம் ஆதீனம் எச்சரிக்கை!

Next Post

நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்த வீடுகள் – அழகான டார்ஜிலிங் – அலங்கோலமான அவலம்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies