4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள மயிலாடும்பாறை வியூ பாயிண்ட் : விரைந்து திறக்க பொதுமக்கள் வலியுறுத்தல்!
Sep 12, 2026, 01:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள மயிலாடும்பாறை வியூ பாயிண்ட் : விரைந்து திறக்க பொதுமக்கள் வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Oct 7, 2025, 07:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கொடைக்கானல் அருகே 4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள மயிலாடும்பாறை வியூ பாயிண்ட்டை திறக்க வேண்டும் எனச் சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்..

மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருவது வழக்கம். விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகள் வருகை பல மடங்கு அதிகரிக்கும்.

வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தொடர்ந்து கொடைக்கானலுக்கு பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வரும் பயணிகளின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக, மயிலாடும்பாறை வியூ பாயிண்ட் இருந்து வந்தது.

வத்தலகுண்டு – கொடைக்கானல் பிரதான மலை சாலையில் மச்சூர் அருகே அமைந்துள்ள அந்த வியூ பாயிண்ட் கொரோனா காலத்தின்போது மூடப்பட்டது. இதனால், கடந்த நான்கு வருடங்களாக அங்கு செல்லப் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வத்தலகுண்டு – கொடைக்கானல் மலைச்சாலை சுமார் 67 கிலோ மீட்டர் நீளமுள்ள நிலையில், இச்சாலையில் பயணிக்கும் மக்கள் மயிலாடும்பாறை வியூ பாயிண்ட் பகுதியில் இளைப்பாறி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

மேலும், அங்கு இயற்கை எழிலை கண்டு ரசித்தும், குடும்பத்துடன் நேரம் செலவிட்டும், புகைப்படம் எடுத்தும் மகிழந்து வந்தனர். இதனால், அப்பகுதியில் ஏற்படும் வாகன விபத்துகளின் எண்ணிக்கை குறைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மயிலாடும்பாறை வியூ பாயிண்ட் தொடர்ந்து மூடப்பட்டே இருப்பது சுற்றுலா பயணிகளை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. எனவே, அதனை மீண்டும் திறக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இப்பூங்காவை திறப்பதினால் அரசுக்கும் வருவாய் கிடைக்கும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மேலும் சில சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளதாகவும், அவற்றையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags: Public urges urgent reopening of Mayiladumbarai View Pointwhich has been closed for 4 yearsமயிலாடும்பாறை வியூ பாயிண்ட்
Share
Tweet
SendShare
Previous Post

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தருமபுரம் ஆதீனம் எச்சரிக்கை!

Next Post

நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்த வீடுகள் – அழகான டார்ஜிலிங் – அலங்கோலமான அவலம்!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies