தான் விரைவில் நடிக்க இருக்கும் புதிய படத்துக்காக நடிகை இஷா தல்வார் தொன்மையான தற்காப்புக் கலையான களரி கற்கும் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.
மும்பையை சேர்ந்த நடிகை இஷா தல்வார், கடந்த 2012ல் தேசிய விருது வென்ற தட்டத்தின் மறயத்து என்ற மலையாள படத்தில் அறிமுகமானார்.
இந்நிலையில் விரைவில் இவர் நடிக்க இருக்கும் புதிய படத்துக்காக, தொன்மையான தற்காப்பு கலையான களரியை கேரளாவில் கற்று வருகிறார்.
களரி ஆசிரியர்கள் மற்றும் அதனைக் கற்கும் மாணவர்களுடன், தான் இருக்கும் புகைப்படங்களை இஷா தல்வார் சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
















