4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள மயிலாடும்பாறை வியூ பாயிண்ட் : விரைந்து திறக்க பொதுமக்கள் வலியுறுத்தல்!
Mar 15, 2026, 06:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள மயிலாடும்பாறை வியூ பாயிண்ட் : விரைந்து திறக்க பொதுமக்கள் வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Oct 7, 2025, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொடைக்கானல் அருகே 4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள மயிலாடும்பாறை வியூ பாயிண்ட்டை திறக்க வேண்டும் எனச் சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்..

மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருவது வழக்கம். விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகள் வருகை பல மடங்கு அதிகரிக்கும்.

வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தொடர்ந்து கொடைக்கானலுக்கு பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வரும் பயணிகளின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக, மயிலாடும்பாறை வியூ பாயிண்ட் இருந்து வந்தது.

வத்தலகுண்டு – கொடைக்கானல் பிரதான மலை சாலையில் மச்சூர் அருகே அமைந்துள்ள அந்த வியூ பாயிண்ட் கொரோனா காலத்தின்போது மூடப்பட்டது. இதனால், கடந்த நான்கு வருடங்களாக அங்கு செல்லப் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வத்தலகுண்டு – கொடைக்கானல் மலைச்சாலை சுமார் 67 கிலோ மீட்டர் நீளமுள்ள நிலையில், இச்சாலையில் பயணிக்கும் மக்கள் மயிலாடும்பாறை வியூ பாயிண்ட் பகுதியில் இளைப்பாறி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

மேலும், அங்கு இயற்கை எழிலை கண்டு ரசித்தும், குடும்பத்துடன் நேரம் செலவிட்டும், புகைப்படம் எடுத்தும் மகிழந்து வந்தனர். இதனால், அப்பகுதியில் ஏற்படும் வாகன விபத்துகளின் எண்ணிக்கை குறைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மயிலாடும்பாறை வியூ பாயிண்ட் தொடர்ந்து மூடப்பட்டே இருப்பது சுற்றுலா பயணிகளை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. எனவே, அதனை மீண்டும் திறக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இப்பூங்காவை திறப்பதினால் அரசுக்கும் வருவாய் கிடைக்கும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மேலும் சில சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளதாகவும், அவற்றையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags: Public urges urgent reopening of Mayiladumbarai View Pointwhich has been closed for 4 yearsமயிலாடும்பாறை வியூ பாயிண்ட்
ShareTweetSendShare
Previous Post

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தருமபுரம் ஆதீனம் எச்சரிக்கை!

Next Post

நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்த வீடுகள் – அழகான டார்ஜிலிங் – அலங்கோலமான அவலம்!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies