4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள மயிலாடும்பாறை வியூ பாயிண்ட் : விரைந்து திறக்க பொதுமக்கள் வலியுறுத்தல்!
Jan 14, 2026, 09:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள மயிலாடும்பாறை வியூ பாயிண்ட் : விரைந்து திறக்க பொதுமக்கள் வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Oct 7, 2025, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொடைக்கானல் அருகே 4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள மயிலாடும்பாறை வியூ பாயிண்ட்டை திறக்க வேண்டும் எனச் சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்..

மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருவது வழக்கம். விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகள் வருகை பல மடங்கு அதிகரிக்கும்.

வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தொடர்ந்து கொடைக்கானலுக்கு பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வரும் பயணிகளின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக, மயிலாடும்பாறை வியூ பாயிண்ட் இருந்து வந்தது.

வத்தலகுண்டு – கொடைக்கானல் பிரதான மலை சாலையில் மச்சூர் அருகே அமைந்துள்ள அந்த வியூ பாயிண்ட் கொரோனா காலத்தின்போது மூடப்பட்டது. இதனால், கடந்த நான்கு வருடங்களாக அங்கு செல்லப் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வத்தலகுண்டு – கொடைக்கானல் மலைச்சாலை சுமார் 67 கிலோ மீட்டர் நீளமுள்ள நிலையில், இச்சாலையில் பயணிக்கும் மக்கள் மயிலாடும்பாறை வியூ பாயிண்ட் பகுதியில் இளைப்பாறி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

மேலும், அங்கு இயற்கை எழிலை கண்டு ரசித்தும், குடும்பத்துடன் நேரம் செலவிட்டும், புகைப்படம் எடுத்தும் மகிழந்து வந்தனர். இதனால், அப்பகுதியில் ஏற்படும் வாகன விபத்துகளின் எண்ணிக்கை குறைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மயிலாடும்பாறை வியூ பாயிண்ட் தொடர்ந்து மூடப்பட்டே இருப்பது சுற்றுலா பயணிகளை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. எனவே, அதனை மீண்டும் திறக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இப்பூங்காவை திறப்பதினால் அரசுக்கும் வருவாய் கிடைக்கும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மேலும் சில சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளதாகவும், அவற்றையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags: Public urges urgent reopening of Mayiladumbarai View Pointwhich has been closed for 4 yearsமயிலாடும்பாறை வியூ பாயிண்ட்
ShareTweetSendShare
Previous Post

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தருமபுரம் ஆதீனம் எச்சரிக்கை!

Next Post

நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்த வீடுகள் – அழகான டார்ஜிலிங் – அலங்கோலமான அவலம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies