மயிலாடுதுறையில் மகப்பேறு மருத்துவமனை கட்டடம் இடிக்கப்பட உள்ளதை கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட போவதாகத் தருமபுரம் ஆதீனத்தின் 27 ஆவது மடாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தின் 24 ஆவது மடாதிபதி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு 25 ஆவது மடாதிபதி காலத்தில் மகப்பேறு மருத்துவமனை திறக்கப்பட்டது.
தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இந்தக் கட்டடம் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாகக் கடந்த ஆண்டுச் சர்ச்சை எழுந்தது.
தற்போது அந்த இடத்தில் நகராட்சி அலுவலகம் கட்டுவதற்காகப் பூமி பூஜை நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியானது. இதைக் கண்டித்து சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தருமபுரம் ஆதீனத்தின் 27 ஆவது மடாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.