சென்னை பாரிமுனையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வழக்கறிஞரை விசிகவினர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நுழைவு வாயில் அருகே விசிக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.
தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை முடித்து விட்டுத் திருமாவளவன் தனது காரில் புறப்பட்டார். அப்போது சாலையில் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் பயணித்த வழக்கறிஞர், கார் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விசிகவினர் வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.