நீலகிரி மாவட்டம் உதகை அருகே விவசாய நிலத்தைக் காட்டு யானை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
காடிமந்து பகுதியில் பழங்குடியின மக்கள் கேரட், முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டுள்ளனர்.
இந்நிலையில், இரவு நேரத்தில் உலா வந்த ஒற்றைக் காட்டுயானை, விவசாய நிலங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த கேரட், முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகளை சூறையாடி சென்றுள்ளது.
இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், சேதமடைந்த விவசாய பயிர்களுக்கு வனத்துறையினர் உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் வனத்துறையினர் காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.