பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அந்நாட்டு ராணுவத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கனிஸ்தான் எல்லை அருகே, கைபர் பக்துன்கவா மாகாணத்தின் ஓராக்காய் மாவட்டத்தில் தலிபான் அமைப்பினர் பதுங்கி இருப்பதாகப் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்தப் பகுதிக்குப் பாகிஸ்தான் ராணுவத்தினர் விரைந்தனர். தொடர்ந்து லெப்டினன்ட் கர்னல் ஜூனைத் ஆரிப் தலைமையில் சென்ற ராணுவத்தினர், தலிபான் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தினர்.
பதிலுக்குத் தலிபான் அமைப்பினரும் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், தலிபான் அமைப்பினர் 19 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் ராணுவ தரப்பில் லெப்டினன்ட் கர்னல் ஜூனைத் ஆரிப், மேஜர் தய்யப் ரஹத் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்தனர்.