பழங்களை மட்டுமே உட்கொண்ட இளம்பெண் உயிரிழப்பு : ஆபத்தில் முடிந்த உடல் எடைகுறைப்பு!
Jan 14, 2026, 07:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பழங்களை மட்டுமே உட்கொண்ட இளம்பெண் உயிரிழப்பு : ஆபத்தில் முடிந்த உடல் எடைகுறைப்பு!

Murugesan M by Murugesan M
Oct 9, 2025, 08:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மூன்று நேரமும் வெறும் பழங்களை மட்டுமே உணவாக உட்கொண்டு வந்த 27 வயது இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். காரணம் என்ன? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

அதிகளவில் துரித உணவுகளை உண்பதாலும், கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதாலும் ஒபிசிட்டி எனப்படும் உடற்பருமனால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் பலர் மாரடைப்பு, புற்றுநோய், சர்க்கரை நோய் உள்ளிட்டவற்றால் உயிரிழக்கவும் நேரிடுகிறது. மறுபுறம், உடல்நலத்தை நன்றாகக் கவனித்துகொள்கிறேன் என்ற பெயரில் ஒரு சிலர், போதுமான உணவை எடுத்துக்கொள்ளாமல் ஆரோக்கியத்தை சீரழித்துக்கொள்ளும் சம்பவங்களும் அங்கொங்கும் இங்கொன்றுமாக நடந்தவண்ணம்தான் உள்ளன.

அண்மையில் கேரளாவை சேர்ந்த 24 வயது பெண் உடல்எடையை குறைக்க வெறும் தண்ணீரை மட்டுமே குடித்து வந்ததால், நோய்வாய்பட்டு உயிரிழந்தார். இதே போன்ற சம்பவம் தற்போது இந்தோனேஷியாவிலும் நிகழ்ந்துள்ளது.

கேரளாவை சேர்ந்த பெண் தண்ணீரை மட்டுமே குடித்ததால் உயிரிழந்தார் என்றால், இந்தோனேஷியாவில் இருந்த பெண் வெறும் பழங்களை மட்டுமே உட்கொண்டதால் உயிரிழந்துள்ளார். போலந்தை சேர்ந்த கரோலினா என்பவர் 19 வயதில் இருந்தே இயற்கையான உணவுகளை உட்கொள்ள தொடங்கியுள்ளார்.

3 நேரமும் பழங்களை மட்டுமே உட்கொள்வதை வழக்கமாகவும் மாற்றிக்கொண்டுள்ளார். தனது இந்த உணவுமுறை குறித்து இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாகப் பதிவிட்டு வந்த அவர், தனது புகைப்படங்களையும் அவ்வபோது பகிர்ந்து வந்தார்.

நாளுக்கு நாள் அவரது உடல் மெலிந்துகொண்டே சென்றபோதும், தனது உணவு முறையை அவர் கைவிடவில்லை. இந்நிலையில்தான் கடந்தாண்டு இறுதியில் இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவுக்குச் சென்ற அவர், அங்குள்ள விடுதி ஒன்றில் தனியாக வசிக்கத் தொடங்கியுள்ளார்.

நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமாகி, கன்னம், தோள்பட்டை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் உள்ள எலும்புகள் துருத்திக்கொண்டு வெளியே தெரிய ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் கரோலினாவால் விடுதியை விட்டே வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படவே, அங்கிருந்த ஊழியர்கள் பழங்கங்களை வாங்கி வந்து கொடுத்துள்ளனர்.

பாலி தீவுக்கு வரும் வெளிநாட்டவர்களில் கணிசமானோர் இப்படி வித்தியாசமானவர்களாக இருப்பார்கள் என்பதால், விடுதி ஊழியர்களும் அவரை பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. ஒருகட்டத்தில் அவரது உடல்எடை வெறும் 23 கிலோவாகக் குறைந்தது.இந்தச் சூழலில் சில நாட்களாக அவர் அறையை விட்டு வெளியே வரவே இல்லை.

இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, கரோலினா இறந்து கிடந்தார். அவருக்கு 27 வயதுதான் ஆயிகிருந்தது. அவர் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு வலுவிழப்பு நோயாலும், அல்புமின் குறைபாட்டாலும் அப்போது பாதிக்கப்பட்டிருந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர்கள், உரிய மருத்துவ வழிகாட்டுதல் இல்லாமல் பழங்களை மட்டுமே உண்பது ஆபத்தானது எனத் தெரிவித்துள்ளனர். பழங்களில் வைட்டமின்கள், நார்ச்சத்து அதிகம் இருந்தபோதிலும், அவற்றில் புரதம், கொழுப்பு, வைட்டமின் பி12 போன்றவை அதிகளவில் இல்லை என்பதையும் அவர்கள் சுட்டிகாட்டுகின்றனர்.

அதிகளவில் துரித உணவுகளை எடுத்துக்கொள்வது ஒரு எல்லை என்றால், போதிய சத்துள்ள உணவுகளை தவிர்ப்பது மற்றொரு எல்லை. இந்த இரு எல்லைகளுமே உடல் ஆரோக்கியத்தை சீரழிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Tags: Young woman dies after eating only fruits: Weight loss ends in dangerஇளம்பெண் உயிரிழப்புஉடல் எடைகுறைப்பு
ShareTweetSendShare
Previous Post

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ரூ.85,790 கோடி அபராதம் : புற்றுநோய் ஏற்படுத்திய பவுடர் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Next Post

பைரசி படங்களை பதிவேற்றிய 21 வயது இளைஞர் : அதிரவைக்கும் நெட்வொர்க் – அதிர்ச்சியூட்டும் பின்னணி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies