WHO-விடம் இந்தியா விளக்கம் : விஷம் கலந்த இருமல் சிரப் ஏற்றுமதி செய்யப்பட்டதா?
Jan 14, 2026, 02:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

WHO-விடம் இந்தியா விளக்கம் : விஷம் கலந்த இருமல் சிரப் ஏற்றுமதி செய்யப்பட்டதா?

Murugesan M by Murugesan M
Oct 9, 2025, 08:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குழந்தைகள் உயிரைப் பறித்த 3 இருமல் சிரப்களில் டைஎதிலீன் கிளைகோல் என்ற விஷத் தன்மையுடைய ரசாயனம் கலந்திருப்பதாக உலகச் சுகாதார மையத்திடம் இந்தியா தெரிவித்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

காஞ்சிபுரத்தில் உள்ள Sresan நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் எனும் இருமல் மருந்தை உட்கொண்டதால் மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 22 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழக அரசுக்கு, மத்தியபிரதேச மாநில சுகாதாரத்துறை கடிதம் எழுதி இருந்தது. இது தொடர்பாகச் சிறப்பு புலனாய்வுக் குழு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதனையடுத்து, விசாரணை நடத்திய தமிழக அரசு, 26 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை மத்திய அரசுக்குத் தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறை நடத்திய ஆய்வில், மருந்து உற்பத்தி செயல்பாட்டில் 350க்கும் மேற்பட்ட கடுமையான விதிமீறல்களில் ஈடுபட்டதோடு, சுகாதாரமற்ற முறையில் அந்நிறுவனம் இயங்கி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான இருமல் மருந்தில் தடை செய்யப்பட்ட டைஎதிலீன் கிளைக்கால் (Diethylene glycol) என்ற ரசாயனத்தைச் சேர்த்திருப்பதையும் இந்த ஆய்வறிக்கை உறுதி செய்துள்ளது. இது மருந்தே அல்ல விஷம் எனவும் தமிழக அரசின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருமல் மருந்து காரணமாகக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்தும், இந்த மருந்துகளின் ஏற்றுமதி விவரங்கள் குறித்தும் உலக சுகாதார மையம் இந்திய அரசிடம் விளக்கம் கேட்டிருந்தது.

தமிழ்நாட்டில் ஸ்ரீசன் மற்றும் குஜராத்தில் ரெட்னெக்ஸ் மற்றும் ஷேப் பார்மா ஆகிய நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்பட்ட மூன்று இருமல் சிரப்களில் டைஎதிலீன் கிளைகோல் என்ற விஷத் தன்மையுடைய ரசாயனம் இருந்தததாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கோல்ட்ரிஃப் மருந்தில் 48.6 சதவீதமும், ரெஸ்பிஃப்ரெஷ் TR சிரப்பில் 1.34 சதவீதமும் மற்றும் ரீலைஃப் சிரப்பில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவும் டைஎதிலீன் கிளைகோல் சேர்க்கப்பட்டிருந்ததையும் மத்திய மருந்துத் தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பு உறுதி செய்துள்ளது.

சர்ச்சைக்குரிய சிரப்கள் எதுவும் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படவில்லை என்று தெரிவித்துள்ள இந்திய ஒழுங்குமுறை அமைப்பு, குறிப்பிட்ட கோல்ட்ரிஃப், ரெஸ்பிஃப்ரெஷ் TR, மற்றும் ரீலைஃப் என்ற மூன்று சிரப் களும் சந்தையிலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.

குற்றத்தில் ஈடுபட்ட 3 நிறுவனங்கள் இனி எந்தவொரு மருந்தையும், மருத்துவப் பொருட்களையும் உற்பத்தி மற்றும் விநியோகம் செய்யத் தடை விதித்த மத்திய சுகாதார அமைச்சகம் மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய ஆறு மாநிலங்களில் உள்ள மருந்து உற்பத்தி நிறுவனங்களை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது.

நாட்டில் ஏற்படும் பொது சுகாதார நெருக்கடியைத் தடுக்க விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு உலக சுகாதார மையத்திடம் தெரிவித்துள்ளது.

Tags: இருமல் சிரப் ஏற்றுமதி செய்யப்பட்டதா?India explains to WHO: Was poisoned cough syrup exported?WHO-விடம் இந்தியா விளக்கம்
ShareTweetSendShare
Previous Post

ஜுபின் கார்க் கொலை ? : அசாம் DSP அதிரடி கைது – அவிழும் மர்ம முடிச்சுகள்!

Next Post

ட்ரம்பின் முயற்சியால் திருப்பம் : இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies