உலகளவில் நிலவும் காந்தங்கள் தட்டுப்பாடு கைவிரித்த சீனா : ரூ.7,350 கோடி திட்டத்துடன் களமிறங்கிய இந்தியா!
Oct 9, 2025, 10:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உலகளவில் நிலவும் காந்தங்கள் தட்டுப்பாடு கைவிரித்த சீனா : ரூ.7,350 கோடி திட்டத்துடன் களமிறங்கிய இந்தியா!

Web Desk by Web Desk
Oct 9, 2025, 09:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

7 ஆயிரத்து 350 கோடி ரூபாய் மதிப்பில் உள்நாட்டிலேயே அரியவகை காந்தங்களை உற்பத்தி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு என்ன காரணம்? அரியவகை காந்தங்கள் என்றால் என்ன? அவற்றின் பயன்பாடு எத்தகையது? என்பது குறித்து இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ஆட்டோமொபைல் துறையில் அரியவகை காந்தங்களின் தேவை தவிர்க்க முடியாததாக உள்ளது. குறிப்பாக, வாகனங்களில் பொருத்தப்படும் பேட்டரி உள்ளிட்ட சாதனங்களில் இந்த வகை காந்தங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய காந்தங்களை பெற பெரும்பாலான நாடுகள் சீனாவையே நம்பியுள்ளன. இதனால், உலகம் முழுவதும் உள்ள காந்தங்களின் தேவையில் 90 சதவீதத்தை சீனாதான் பூர்த்தி செய்து வருகிறது.

இந்தச் சூழலில்தான், கடந்த ஏப்ரல் மாதம் காந்த ஏற்றுமதியை சீனா திடீரென நிறுத்தியது. இதனால், உலகின் அனைத்து நாடுகளும் பெரும்பாதிப்பைச் சந்தித்தனன. முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களும்சரிவைச் சந்திக்கும்நிலைக்குத் தள்ளப்பட்டனன. அரிய வகை காந்தங்களை வழங்காவிட்டால், 200 சதவீதம் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு நிலைமை சென்றது. இருப்பினும் காந்தங்களை ஏற்றுமதி செய்ய முடியாது என்ற முடிவில் சீனா உறுதியாக உள்ளது. இதனால், வேறு யாரிடம் காந்தங்களை பெறுவதுஎனத் தெரியாமல் உலக நாடுகள் கையை பிசைந்தபடி உள்ளன. காந்தங்களின் தட்டுப்பாடால் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையும்பாதிப்பைச் சந்தித்துள்ளது.

இந்தியாவிற்கு காந்தங்களை வழங்க சீனா தயாராகத்தான் உள்ளது. ஆனால், அவ்வாறு வாங்கும் காந்தத்தை எக்காரணம் கொண்டும் அமெரிக்காவிற்கு மறுவிற்பனை செய்யக் கூடாது எனவும், முழுக்க முழுக்க உள்நாட்டு பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் சீனா கட்டுப்பாடு விதித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வரும் நிலையில், உள்நாட்டிலேயே காந்தங்களை உற்பத்தி செய்யவும் முடிவெடுத்துள்ளது.

சீனாவிடம் 44 மில்லியன் டன் அரிய வகை தனிமங்களுள்ள நிலையில், இந்தியாவிடம் 7 மில்லியன் டன் அளவுக்கு அரிய வகை தனிமங்கள் இருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது உலகளவில் 3வது அதிக எண்ணிக்கையாகும். பூமிக்கு அடியில் உள்ள அரியவகை தனிமங்களை வெட்டி எடுத்து, சுத்திகரித்து காந்தங்களை தயாரித்து, வாகனங்களில் பொருத்தும் நிலைக்கு மேம்படுத்துவது மிகவும் சிக்கலான வேலையாகக் கருதப்படுகிறது.

இந்தச் சிக்கலான வேலையை சிறப்பாகச் செய்து முடிக்க மத்திய அரசு 7 ஆயிரத்து 350 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை கொண்டு வரவுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 6 ஆயிரம் டன் அரியவகை தனிமங்கள் வெட்டி எடுக்கப்படும் எனவும், அடுத்த 7 ஆண்டுகளுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான பணி உள்நாட்டை சேர்ந்த 5 நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும், அவை ஆண்டுக்குத் தலா 600 முதல் ஆயிரத்து 200 டன் அரியவகை தனிமங்களை வெட்டி எடுக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பணியை செய்து முடிக்க அதிநவீன இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் தேவைப்படும் என்பதால், சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பதுடன், மானியங்களை வழங்கவும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

தற்போதைய சூழலில் இந்தியாவின் காந்த தேவை ஆண்டுக்கு 4 ஆயிரத்து 10 டன்னாக உள்ளது. 2030ம் ஆண்டுஇந்தத் தேவையின் அளவு 8 ஆயிரத்து 220 டன்னாக உயரும் எனவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் உள்நாட்டிலேயே அரிய வகை காந்தங்களை தயாரிக்கும் மத்திய அரசின் முடிவு, நீண்ட கால நோக்கில் சிறப்பான பலனை அளிக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags: China has taken advantage of the global shortage of magnets: India has come forward with a Rs. 7350 crore projectகளமிறங்கிய இந்தியா
ShareTweetSendShare
Previous Post

ட்ரம்பின் முயற்சியால் திருப்பம் : இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

Next Post

அணுசக்தித் துறையில் இனி தனியாருக்கு அனுமதி : பிரதமர் மோடி

Related News

அணுசக்தித் துறையில் இனி தனியாருக்கு அனுமதி : பிரதமர் மோடி

ட்ரம்பின் முயற்சியால் திருப்பம் : இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

WHO-விடம் இந்தியா விளக்கம் : விஷம் கலந்த இருமல் சிரப் ஏற்றுமதி செய்யப்பட்டதா?

ஜுபின் கார்க் கொலை ? : அசாம் DSP அதிரடி கைது – அவிழும் மர்ம முடிச்சுகள்!

பைரசி படங்களை பதிவேற்றிய 21 வயது இளைஞர் : அதிரவைக்கும் நெட்வொர்க் – அதிர்ச்சியூட்டும் பின்னணி!

பழங்களை மட்டுமே உட்கொண்ட இளம்பெண் உயிரிழப்பு : ஆபத்தில் முடிந்த உடல் எடைகுறைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உலகளவில் நிலவும் காந்தங்கள் தட்டுப்பாடு கைவிரித்த சீனா : ரூ.7,350 கோடி திட்டத்துடன் களமிறங்கிய இந்தியா!

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ரூ.85,790 கோடி அபராதம் : புற்றுநோய் ஏற்படுத்திய பவுடர் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

தொல்பொருள் ஆய்வுக்கு வலியுறுத்தல் : விளைநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நுாற்றாண்டு புத்தர்சிலைகள்!

வியாபாரிகள் போட்டா போட்டி : “தீபாவளி”க்கு டிசைன் டிசைனாய் துப்பாக்கிகள்!

“பட்டா கொடுத்தும் பலனில்லை” : திரும்பிப் பார்க்குமா திமுக அரசு?

ஜாதி பெயர் மாற்றம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கருணாநிதி பெயர் சூட்டும் அவலம்- எல் முருகன்

சிறப்பு புலனாய்வு குழு மனுவிற்கு தவெக தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

இந்திய விமானப்படை விழாவின் இரவு விருந்தின் உணவு பட்டியல் வைரல்!

அணியில் இடமில்லை – மவுனம் கலைத்த முகமது ஷமி

மதுரை : கிரிக்கெட் வீரர் தோனிக்கு உற்சாக வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies