வெனிசுலா பெண்மணிக்கு "அமைதிக்கான நோபல் பரிசு" : குட்டிக்கரணம் அடித்த ட்ரம்புக்கு ஏமாற்றம்!
Sep 13, 2026, 12:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

வெனிசுலா பெண்மணிக்கு “அமைதிக்கான நோபல் பரிசு” : குட்டிக்கரணம் அடித்த ட்ரம்புக்கு ஏமாற்றம்!

Murugesan M by Murugesan M
Oct 10, 2025, 09:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2025-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரினோ மச்சாடேவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. 8 போர்களை நிறுத்தியதாக அடம்பிடித்த ட்ரம்புக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. விரிவார பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

2025-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டின் ‘இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்படும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுலா மக்களுக்கு ஜனநாயக உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காக அயராது போராடி, சர்வாதிகாரத்திற்கு சிறிதும் அஞ்சாமல் தைரியமாகக் குரல் கொடுக்கும் மரியா கொரினா மச்சாடோவுக்கு இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் அமைதிக்கான நோபல் பரிசு மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எட்டு போரை நிறுத்தியிருக்கிறேன்… எனக்குத் தான் பரிசு வேண்டும் என அடம்பிடிக்க எதிர்பார்ப்பு எகிறியது.

அதுவும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கான முதற்கட்ட ஒப்பந்தம், பரிசு அறிவிப்பதற்கு ஒருநாள் முன்னதாகக் கையெழுத்தாகி இருக்க, யாருக்கு நோபல் பரிசு என்பது உலகம் முழுவதும் பேசுபொருளானது. ஆனால், நோபல் பரிசு தேர்வுக்குழு, ட்ரம்ப்பின் பேச்சையெல்லாம் காதில் போட்டுக்கொண்டதாகத் தெரியவில்லை.

என்னவேண்டுமானாலும் கூறுங்கள்… ரூல்ஸ்னா ரூல்ஸ் தான் என மரியா கொரினா மச்சாடோவை தேர்வு செய்திருக்கிறார்கள். தி நார்வேஜியன் நோபல் கமிட்டி தலைவர் ஜோர்கன் வாட்னே ஃப்ரிட்நெஸிடம் ட்ரம்புக்கு ஏன் விருது அறிவிக்கவில்லை என கேள்வி எழுப்பியபோது, தேர்வுக்குழுவினர் அமர்ந்திருந்த அறை, தைரியம் மற்றும் நேர்மை ஆகியவற்றால் நிரம்பி வழிந்ததாகச் சூசகமாகப் பதிலளித்தார்.

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பானது அதிபர் ட்ரம்புக்கு நிச்சயம் ஏமாற்றமே. ஆனால், வெனிசுலாவில் சர்வாதிகாரம் துடைத்தெறியப்பட வேண்டும்… மக்களாட்சி மலர வேண்டும் என்பதே அமெரிக்காவின் நீண்ட கால நிலைப்பாடு.

எனவே மரியா கொரினா மச்சாடோவுக்கு பரிசு கிடைத்ததை ட்ரம்புக்கு ஏற்பட்ட அவமானமாகக் கருத முடியாது என்ற ஆதரவு கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

இஸ்ரேல் – ஹமாஸ் போரை நிறுத்தியதற்கு முன்னரே, மரியா கொரினா மச்சாடோ நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டதால், ட்ரம்புக்கு அடுத்த ஆண்டு வழங்கப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.

இது ஒருபுறம் இருக்க இன்னும் எத்தனை போர்களை நிறுத்தினால் நோபல் பரிசு கிடைக்குமோ என்ற கிண்டலுக்கும் உள்ளாகி இருக்கிறார் டொனால்டு ட்ரம்ப்.

Tags: usanobal prizeDonald TrumpVenezuelan woman awarded Nobel Peace Prize: Trump disappointed with snubவெனிசுலா பெண்மணிக்கு "அமைதிக்கான நோபல் பரிசு
Share
Tweet
SendShare
Previous Post

காவலாளி TO சாப்ட்வேர் என்ஜினீயர் : இளைஞனின் வாழ்க்கையை மாற்றிய ZOHO நிறுவனம்!

Next Post

உலகளவில் நிலவும் காந்தங்கள் தட்டுப்பாடு கைவிரித்த சீனா : ரூ.7,350 கோடி திட்டத்துடன் களமிறங்கிய இந்தியா!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies