மேம்பாலத்திற்கு அகற்றப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் - பொதுமக்கள் சிரமம்!
Jan 15, 2026, 08:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மேம்பாலத்திற்கு அகற்றப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் – பொதுமக்கள் சிரமம்!

Murugesan M by Murugesan M
Oct 10, 2025, 03:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை-அவினாசி சாலை மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ள நிலையில், அப்பாலப் பணிகளுக்காக அகற்றப்பட்ட பேருந்து நிறுத்தங்களை அமைக்காமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பேருந்து நிறுத்தங்களை அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை மாவட்டம் அவினாசி சாலையில் நாளுக்கு நாள் அதிகரித்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. சுமார் பத்து கிலோ மீட்டர் தூர பாலத்தில் 4 இடங்களில் ஏறுதளம் மற்றும் இறங்குதளம் அமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

இப்பாலம் அமைப்பதற்காக ஏற்கனவே குறிப்பிட்ட பகுதிகளில் இருந்த பேருந்து நிறுத்தங்கள் அகற்றப்பட்டன. பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்ட பின்னரும் அகற்றப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் மீண்டும் அமைக்கப்படாத காரணத்தினால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

மருத்துவமனைகள், கல்லூரிகள் அதிகம் இருக்கக்கூடிய அவினாசி சாலையில் பேருந்து நிறுத்தங்கள் இல்லாத காரணத்தினால், அச்சாலையை பயன்படுத்தக்கூடிய பொதுமக்கள் அமரக் கூட இருக்கையின்றி வெயிலில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் நீண்ட நேரம் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

மேம்பாலத்திற்கு கீழே சாலையைக் கடக்கும் வகையில் ஐந்து இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மெட்ரோ ரயில் திட்டத்தை காரணம் காட்டி அப்பணிகளை கைவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாலத்தை கட்டி திறந்துவிட்டோம் எனப் பெருமையுடன் பேசும் நேரத்தில் அது மக்களுக்குப் பயனுள்ள வகையில் அமைக்கப்பட்டிருக்கிறதா என்பதை தமிழக அரசு சிந்திக்க வேண்டும் எனப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags: Bus stops removed for flyover - inconvenience to the publicகோவை-அவினாசிஅகற்றப்பட்ட பேருந்து நிறுத்தங்கள்
ShareTweetSendShare
Previous Post

கிருஷ்ணகிரி : ஆம்புலன்ஸ் தாமதத்தால் மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Next Post

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் தமிழகம் தலை நிமிரும் – இராம.ஸ்ரீனிவாசன் பேட்டி!

Related News

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% வரி விதிப்பு – இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சர்ச்சை – இந்தியா-சீனா இடையே வெடிக்கும் புதிய மோதலுக்கு பின்னணி என்ன?

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies