மேம்பாலத்திற்கு அகற்றப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் - பொதுமக்கள் சிரமம்!
Jul 29, 2026, 01:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மேம்பாலத்திற்கு அகற்றப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் – பொதுமக்கள் சிரமம்!

Murugesan M by Murugesan M
Oct 10, 2025, 03:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை-அவினாசி சாலை மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ள நிலையில், அப்பாலப் பணிகளுக்காக அகற்றப்பட்ட பேருந்து நிறுத்தங்களை அமைக்காமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பேருந்து நிறுத்தங்களை அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை மாவட்டம் அவினாசி சாலையில் நாளுக்கு நாள் அதிகரித்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. சுமார் பத்து கிலோ மீட்டர் தூர பாலத்தில் 4 இடங்களில் ஏறுதளம் மற்றும் இறங்குதளம் அமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

இப்பாலம் அமைப்பதற்காக ஏற்கனவே குறிப்பிட்ட பகுதிகளில் இருந்த பேருந்து நிறுத்தங்கள் அகற்றப்பட்டன. பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்ட பின்னரும் அகற்றப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் மீண்டும் அமைக்கப்படாத காரணத்தினால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

மருத்துவமனைகள், கல்லூரிகள் அதிகம் இருக்கக்கூடிய அவினாசி சாலையில் பேருந்து நிறுத்தங்கள் இல்லாத காரணத்தினால், அச்சாலையை பயன்படுத்தக்கூடிய பொதுமக்கள் அமரக் கூட இருக்கையின்றி வெயிலில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் நீண்ட நேரம் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

மேம்பாலத்திற்கு கீழே சாலையைக் கடக்கும் வகையில் ஐந்து இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மெட்ரோ ரயில் திட்டத்தை காரணம் காட்டி அப்பணிகளை கைவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாலத்தை கட்டி திறந்துவிட்டோம் எனப் பெருமையுடன் பேசும் நேரத்தில் அது மக்களுக்குப் பயனுள்ள வகையில் அமைக்கப்பட்டிருக்கிறதா என்பதை தமிழக அரசு சிந்திக்க வேண்டும் எனப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags: Bus stops removed for flyover - inconvenience to the publicகோவை-அவினாசிஅகற்றப்பட்ட பேருந்து நிறுத்தங்கள்
ShareTweetSendShare
Previous Post

கிருஷ்ணகிரி : ஆம்புலன்ஸ் தாமதத்தால் மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Next Post

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் தமிழகம் தலை நிமிரும் – இராம.ஸ்ரீனிவாசன் பேட்டி!

Related News

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies