மேம்பாலத்திற்கு அகற்றப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் - பொதுமக்கள் சிரமம்!
Sep 12, 2026, 05:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மேம்பாலத்திற்கு அகற்றப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் – பொதுமக்கள் சிரமம்!

Murugesan M by Murugesan M
Oct 10, 2025, 03:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை-அவினாசி சாலை மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ள நிலையில், அப்பாலப் பணிகளுக்காக அகற்றப்பட்ட பேருந்து நிறுத்தங்களை அமைக்காமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பேருந்து நிறுத்தங்களை அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை மாவட்டம் அவினாசி சாலையில் நாளுக்கு நாள் அதிகரித்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. சுமார் பத்து கிலோ மீட்டர் தூர பாலத்தில் 4 இடங்களில் ஏறுதளம் மற்றும் இறங்குதளம் அமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

இப்பாலம் அமைப்பதற்காக ஏற்கனவே குறிப்பிட்ட பகுதிகளில் இருந்த பேருந்து நிறுத்தங்கள் அகற்றப்பட்டன. பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்ட பின்னரும் அகற்றப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் மீண்டும் அமைக்கப்படாத காரணத்தினால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

மருத்துவமனைகள், கல்லூரிகள் அதிகம் இருக்கக்கூடிய அவினாசி சாலையில் பேருந்து நிறுத்தங்கள் இல்லாத காரணத்தினால், அச்சாலையை பயன்படுத்தக்கூடிய பொதுமக்கள் அமரக் கூட இருக்கையின்றி வெயிலில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் நீண்ட நேரம் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

மேம்பாலத்திற்கு கீழே சாலையைக் கடக்கும் வகையில் ஐந்து இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மெட்ரோ ரயில் திட்டத்தை காரணம் காட்டி அப்பணிகளை கைவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாலத்தை கட்டி திறந்துவிட்டோம் எனப் பெருமையுடன் பேசும் நேரத்தில் அது மக்களுக்குப் பயனுள்ள வகையில் அமைக்கப்பட்டிருக்கிறதா என்பதை தமிழக அரசு சிந்திக்க வேண்டும் எனப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags: Bus stops removed for flyover - inconvenience to the publicகோவை-அவினாசிஅகற்றப்பட்ட பேருந்து நிறுத்தங்கள்
Share
Tweet
SendShare
Previous Post

கிருஷ்ணகிரி : ஆம்புலன்ஸ் தாமதத்தால் மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Next Post

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் தமிழகம் தலை நிமிரும் – இராம.ஸ்ரீனிவாசன் பேட்டி!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies