அமெரிக்காவில் பார் ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா தீவில், பார் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இங்கு நுழைந்த மர்மநபர் ஒருவர் தீடீரென அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.