விவாதத்தை கிளப்பிய பிரபல டிவி நிகழ்ச்சி - கற்பித்தலில் குறைபாடா? பெற்றோர் வளர்ப்பா? - குறை எங்கு உள்ளது?
Jan 14, 2026, 08:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

விவாதத்தை கிளப்பிய பிரபல டிவி நிகழ்ச்சி – கற்பித்தலில் குறைபாடா? பெற்றோர் வளர்ப்பா? – குறை எங்கு உள்ளது?

Murugesan M by Murugesan M
Oct 13, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கவுன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் பட்டாசு போல வெடித்த சிறுவனின் பேச்சும், அதீத நம்பிக்கையும் இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. இது டிவி நிகழ்ச்சியையும் தாண்டி இன்றைய கல்வி முறை, நவீனகால பெற்றோர் பற்றிய விவாதத்தையும் தூண்டியுள்ளது.

சோனி டிவியில் ஒளிபரப்பாகும் கவுன் பனோகா குரோர்பதி நிகழ்ச்சி இந்தியா முழுவதும் மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சியைப் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார். அக்டோபர் 9ம் தேதி ஒளிபரப்பான கேபிசி 17 ஜூனியர்ஸ் எபிசோடில் குஜராத் மாநிலம் காந்தி நகரைச் சேர்ந்த 5ம் வகுப்பு மாணவர் இஷித், போட்டியாளராகப் பங்கேற்றிருந்தார். போட்டியின் விதிகள் குறித்து ஒரு தொகுப்பாளராக அமிதாப் பச்சன் விளக்க முற்பட்டபோது, எனக்கு விதிகள் தெரியும், இப்போது உட்கார்ந்து அவற்றை எனக்கு விளக்க வேண்டாம் என்று கூறியது பார்வையாளர்களிடம் முக சுழிப்பை ஏற்படுத்தியது.

அமிதாப் பச்சன் கேட்ட கேள்விகளுக்கு, ஆப்ஷன்களை தெளிவுபடுத்தும் முன்பாக, சிறுவன் இஷித் அதிரடியாகப் பதிலளித்து பார்வையாளர்களை ஆச்சர்யமூட்டினார்.
அமிதாப் பச்சன் முன்பு முரட்டுத்தனமாக, அதீத தன்னம்பிக்கையுடன் அந்தச் சிறுவன் பதிலளித்த விதம் இணையதளத்தில் பெரும் விவாதத்தையும் கிளப்பியது. இறுதியாக வால்மீகி ராமாயணத்தின் முதல் காண்டத்தின் பெயர் என்ன என்ற கேள்விக்கு, ஆப்சன்களை கேட்ட அந்தச் சிறுவன், சரியான பதிலை அளிக்கத் தவறிவிட்டார்.

அந்தச் சிறுவன் துணிச்சலாக இருந்தபோதும், ஒரு கேள்விக்குச் சரியாகப் பதிலளிக்க தவறியது, பரிசுத் தொகையை இழந்தது நெட்டின்களை விமர்சிக்கத் தூண்டியது. கவுன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளர், தொகுப்பாளரை வார்த்தைகளால் திட்டுவதும் இதுதான் முதல்முறையாகப் பதிவானது. இந்த விவாதம் இந்த நிகழ்ச்சியோடு நின்றுவிடவில்லை. தற்போது பள்ளிகளில் கற்பிக்கும் முறை அதீத நம்பிக்கை கொண்ட குழந்தைகளை வளர்த்தெடுப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதுமட்டுமின்றி நவீன பெற்றோர்களைப் பற்றிய ஆவேசமான விவாதமாகவும் மாறியுள்ளது. பெற்றோர்கள் மட்டுமல்ல, பள்ளிகளும் அதிக தன்னம்பிக்கை கொண்ட குழந்தைகளை வளர்க்கின்றன. ஒரு இளம் போட்டியாளரின் அதீத தன்னம்பிக்கைக்கு பெற்றோரைச் சமூக ஊடகங்கள் விரைவாகக் குறை கூறினாலும், பெரிய குற்றவாளி பள்ளிகளாக இருக்கலாம். இந்தியாவில் பள்ளிகள் அடுத்த தலைமுறையை எவ்வாறு வடிமைக்கிறது என்பதோடு தொடர்புடையதாகப் பார்க்கப்படுகிறது.

தேர்வு, தரவரிசை, சரியாக விடையளித்தல் போன்றவற்றிற்கு பழக்கப்படும் மாணவர்களுக்கு, புரிதல் குறைவாக இருந்தாலும் கூடச் சரியாகப் பேச, பயிற்சி அளிக்கப்படுகிறார்கள். பாடப்புத்தகத்தை கேள்வி கேட்கும் ஒரு குழந்தைகளைவிட, அதை குறைவின்றி சொல்பவர் புத்திசாலியாகக் கருதப்படுகிறார்.

இது புத்தகத்தை தாண்டிக் கேட்கப்படும் கேள்விகளுக்கு விழிபிதுங்கும் சூழலை குழந்தைகள் மத்தியில் உருவாக்குவதாக நெட்டிசன்கள் கூறுகிறார்கள். அறியாமை என்பது பலவீனம் அல்ல, கற்றலின் ஆரம்பம் என்பதை நமது பள்ளிகள் கற்பிக்க வேண்டும், அதிக மதிப்பெண்களைப் போலவே தாழ்வு மனப்பான்மையையும் கொண்டாடும் வகுப்பறைகளும், மனப்பாடம் செய்து கற்றுக் கொள்வதை விட, சிந்தனையைப் பாராட்டி ஊக்குவிக்கும் ஆசிரியர்களும் இன்றைய கல்விமுறைக்கு தேவை.

திறமை இல்லாத தன்னம்பிக்கை என்பது வெறுமனே ஈர்க்கக் கூடியதாக இருக்கலாம், ஆனால் அது கண்ணாடி போன்று உடையக்கூடியது. பெற்றோரும் சமூகமும் குழந்தைகளுக்குப் பணிவு மற்றும் மரியாதையை கற்பிக்க வேண்டும்.

அதிகப்படியான தன்னம்பிக்கை மற்றும் மோசமான பழக்கவழக்கங்கள் கல்வி முறையை மட்டுமல்ல, தனிப்பட்ட வளர்ப்பையும் பிரதிபலிக்கின்றன. எனவே உண்மையான கல்வி இரண்டையும் வலுப்படுத்த வேண்டும், சீர்திருத்தமானது வகுப்பறையில் தொடங்கப்பட வேண்டும் என்பதே பலரது கருத்தாக உள்ளது.

Tags: A popular TV show that sparked debate - Is it a flaw in teaching? Parenting? - Where is the flaw?
ShareTweetSendShare
Previous Post

மேற்கு வங்கத்தில் தொடரும் பாலியல் கொடூரம் : கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு!

Next Post

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் இடையே மலரும் புதிய உறவு : பாக்.வயிற்றில் புளியை கரைத்த கூட்டறிக்கை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies