மேற்கு வங்கத்தில் தொடரும் பாலியல் கொடூரம் : கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு!
Sep 13, 2026, 05:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மேற்கு வங்கத்தில் தொடரும் பாலியல் கொடூரம் : கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு!

Murugesan M by Murugesan M
Oct 13, 2025, 07:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேற்கு வங்க மாநிலம், துர்காபூரில் 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தின் முழு பின்னணி குறித்து இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்…

ஒடிசா மாநிலம், ஜலேஷ்வர் பகுதியைச் சேர்ந்த 23 வயது மாணவி, மேற்கு வங்கத்தின் துர்காபூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

கடந்த 10-ம் தேதி இரவு மாணவி, தனது ஆண் நண்பருடன் உணவருந்த வெளியே சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர்களை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சிலர், ஆண் நண்பரை சரமாரியாக தாக்கித் துரத்தியுள்ளனர்.

தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்திற்கு, வலுக்கட்டாயமாக மாணவியை தூக்கிச் சென்றவர்கள் அவரைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதில் படுகாயமடைந்த மாணவி அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக்கோரி மருத்துவ மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர்.

அதனடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய போலீசார் வழக்கில் தொடர்புடைய அப்பு பௌரி, ஃபிர்தோஸ் ஷேக் மற்றும் ஷேக் ரெயாஜுதீன் ஆகிய 3 பேரை கைது செய்ததுடன் மாணவியின் ஆண் நண்பரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். இது ஒருபுறமிருக்க நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாகக் கருத்து தெரிவித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு கல்லூரி நிர்வாகமே முழு பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இரவு நேரத்தில் மாணவியை கல்லூரி நிர்வாகம் வெளியே அனுப்ப சம்மதித்தது தவறு எனக் குற்றம் சாட்டியுள்ள அவர், கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியத்தால் மட்டுமே இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய முதலமைச்சர் பொறுப்பற்ற முறையில் பதிலளித்துள்ளதாகப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடந்த அசம்பாவிதத்தால் மிகுந்த வேதனையில் உள்ள தங்கள் மகளின் உயிருக்கு மேற்கு வங்கத்தில் ஆபத்து இருப்பதாகவும், அவரை ஒடிசாவிற்கு திரும்பி அழைத்துச் செல்ல விரும்புவதாகவும் மாணவியின் தந்தை கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

மேலும், தங்கள் மகளை ஒடிசாவிற்கு அழைத்துச் வர உதவுவதாக ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (BREATH) ஏற்கனவே கடந்த ஆண்டு மேற்கு வங்கத்திலுள்ள மற்றொரு தனியார் மருத்துவ கல்லூரியில், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

அந்தச் சம்பவத்தின் தாக்கம் மனதைவிட்டு மறைவதற்குள், மற்றொரு மருத்துவ மாணவியும் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது, மேற்கு வங்கத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

Tags: Sexual violence continues in West Bengal: Women's safety in questionகேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு
Share
Tweet
SendShare
Previous Post

எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம் – ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள்!

Next Post

விவாதத்தை கிளப்பிய பிரபல டிவி நிகழ்ச்சி – கற்பித்தலில் குறைபாடா? பெற்றோர் வளர்ப்பா? – குறை எங்கு உள்ளது?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies