எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம் - ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள்!
Jul 24, 2026, 12:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம் – ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள்!

Murugesan M by Murugesan M
Oct 13, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை வியாசர்பாடி கணேசாபுரம் மேம்பால பணிகள் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகியும் பணிகள் மந்த நிலையில் நடைபெறுவதால் அப்பகுதி வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் பாலத்தைக் கடந்து செல்லவே சிரமப்படும் நிலையில், பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பருவ மழையின்போது சென்னை மாநகரில் மழை நீரால் தத்தளிக்கும் பகுதிகளில் மிக முக்கியமான பகுதி தான் வட சென்னை. வடசென்னையின் கணேசபுரம் சுரங்கப்பாதை மழை நீரால் மூழ்குவதையும் அப்பகுதி மக்கள் படும் துயரத்தினையும் ஆண்டுதோறும் பார்க்க முடிகிறது.

வியாசர்பாடி, கொளத்தூர், மாதவரம், கொடுங்கையூர், கண்ணதாசன் நகர், மகாகவி பாரதியார் நகர், மூலக்கடை ஆகிய பகுதிகளுக்குச் செல்வதற்கு வியாசர்பாடி கணேசபுரம் ரெயில்வே சுரங்கப்பாதையை கடந்து செல்ல வேண்டும் என்ற சூழலால் போக்குவரத்து நெரிசலும் அதிகளவு ஏற்படுகிறது.

பொதுமக்கள் சந்திக்கும் சிரமங்களை தவிர்க்கும் வகையில் 226 கோடி ரூபாய் செலவில் 600 மீட்டர் தூரத்திற்கு கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. 50 சதவிகிதம் பணிகள் நிறைவடைந்த நிலையில், மீதமிருக்கும் பணிகள் எப்போது முடியும் என அப்பகுதி மக்களும், வியாபாரிகளும் மிகுந்த ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

கணேசபுரம் மேம்பால திட்டம் தொடங்கிய நாட்களில் மகிழ்ச்சியாக இருந்த பகுதி மக்கள், ஆமை வேகத்தில் நடந்து வரும் பணிகளை கண்டு மிகுந்த அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மீண்டும் மழையால் தத்தளிக்கும் அவல நிலையை நினைத்து அவர்கள் வேதனையடைந்துள்ளனர்.

வருடக்கணக்கில் நடைபெறும் பணிகளால் அப்பகுதிகளில் கடை வைத்துள்ள வியாபாரிகளும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதில் தொடங்கி, மருத்துவமனைக்குக் கூடப் பல கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய சூழலுக்குப் பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆமை வேகத்தில் நடைபெறும் பணிகளை விரைவுபடுத்தி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே பணிகளை முடிக்க வேண்டும் எனப் பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: கணேசபுரம் மேம்பாலம்மேம்பால பணிகள்newsTodayசென்னை வியாசர்பாடிWhen will the Ganeshapuram flyover be put into service - people are eagerly waiting
ShareTweetSendShare
Previous Post

திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி – எல். முருகன்

Next Post

மேற்கு வங்கத்தில் தொடரும் பாலியல் கொடூரம் : கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு!

Related News

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 70,485 பேர் விண்ணப்பம்!

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம் – ரயில்வே அமைச்சகம்

ஜனநாயக நாடுகளின் அமைதியை சீர்குலைக்கும் DEEP STATE : டெல்லி மாணவர் போராட்டத்தின் பின்னணியில் யார்? – சிறப்பு தொகுப்பு!

ஜந்தர் மந்தரில் குழப்பம்; சீக்கியர்கள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இடையே கைகலப்பு

அரிய வகை கனிமங்கள் : ஜப்பானுக்கு ஏற்றுமதியை நிறுத்திய சீனா – சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தானுக்கு அடுத்த’செக்’ : சிந்து நதியில் நீர்வளத் திட்டங்களை தீவிரப்படுத்தும் இந்தியா -சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

கேரள ஆர்எஸ்எஸ் நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கு – பிஎஃப்ஐ நிர்வாகி முகமது அலி கைது!

டெல்லி போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு மதமாற்ற அமைப்புகள் – அம்பலமான அதிர்ச்சி தகவல்!

சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்ப முயற்சி – டெல்லி காவல்துறை எச்சரிக்கை!

நீண்ட தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ‘குஷா’ ஏவுகணை – முதற்கட்ட சோதனை வெற்றி!

பழனி கோயில் நில பதிவு மோசடி வழக்கு – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி வழக்கு!

தூத்துக்குடியில் விசாரணைக்கு சென்றவர் உயிரிழப்பு – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகள் திரைப்படம் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

நீட் விவாதத்தைத் தடுத்து நிறுத்துவதே காங்கிரசின் நோக்கம் – கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

நீட்தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விசாரிக்க விரைவு நீதிமன்றம் – பிரதமர் மோடி உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies