இந்தியா - ஆஃப்கானிஸ்தான் இடையே மலரும் புதிய உறவு : பாக்.வயிற்றில் புளியை கரைத்த கூட்டறிக்கை!
Sep 14, 2026, 02:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் இடையே மலரும் புதிய உறவு : பாக்.வயிற்றில் புளியை கரைத்த கூட்டறிக்கை!

Murugesan M by Murugesan M
Oct 13, 2025, 08:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் இடையே மலரும் புதிய உறவு பாகிஸ்தானின் அடிவயிற்றில் கிலியை கிளப்பியுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்..

இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தும் விதமாகக் கடந்த 10-ம் தேதி டெல்லி வந்த ஆஃப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தாகி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தொடர்ந்து அந்தச் சந்திப்பு தொடர்பாக இரு நாடுகளின் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு வலுவான கண்டனங்களை பதிவு செய்த ஆஃப்கானிஸ்தானுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்திருந்தார்.

மேலும், இந்தியா – ஆஃப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிரான இணைந்த நிலைபாட்டை கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதேபோல, ஆஃப்கான் அமைச்சர் முத்தாகியும் ஆஃப்கானிஸ்தானின் நிலம் எந்த நாட்டிற்கும் எதிராகச் செயல்படாது என்றும், 40 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதே தங்கள் நாடு அமைதி மற்றும் முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டிருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் பகுதி என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அது ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களுக்கு முரணானனது எனக்கூறி பாகிஸ்தான் செய்வதறியாது புலம்பத் தொடங்கியுள்ளது. அதேபோல, பயங்கரவாதம் பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்னை எனக் குறிப்பிட்டிருந்த ஆஃப்கானிஸ்தான் அமைச்சரின் கருத்துக்கும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பான தங்களின் கவலைகளை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் பகிர்ந்துள்ளதாகவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஃப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், இந்தியா – ஆப்கன் அரசுகள் உயர்மட்ட சந்திப்பில் ஈடுபடுவது இதுவே முதல் முறை.

இந்தச் சந்திப்பின் மூலம் இந்தியா – ஆஃப்கானிஸ்தான் உறவுகள் புதிய திசையில் நகர வாய்ப்புள்ளது என்றாலும், மற்றொரு புறம் பாகிஸ்தானின் எதிர்ப்பால் பிராந்திய அளவிலான பிரச்னைகள் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்றும் புவிசார் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags: IndiapakistanafganistanNew relationship blossoming between India and Afghanistan: Joint statement that soured Pakistan's stomach!
Share
Tweet
SendShare
Previous Post

விவாதத்தை கிளப்பிய பிரபல டிவி நிகழ்ச்சி – கற்பித்தலில் குறைபாடா? பெற்றோர் வளர்ப்பா? – குறை எங்கு உள்ளது?

Next Post

பாக்.,கை தாலிபான்கள் பந்தாடும் பின்னணி : இந்தியா நிலைப்பாடு என்ன?

Related News

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies