இந்தியா - ஆஃப்கானிஸ்தான் இடையே மலரும் புதிய உறவு : பாக்.வயிற்றில் புளியை கரைத்த கூட்டறிக்கை!
Jun 15, 2026, 03:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் இடையே மலரும் புதிய உறவு : பாக்.வயிற்றில் புளியை கரைத்த கூட்டறிக்கை!

Murugesan M by Murugesan M
Oct 13, 2025, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் இடையே மலரும் புதிய உறவு பாகிஸ்தானின் அடிவயிற்றில் கிலியை கிளப்பியுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்..

இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தும் விதமாகக் கடந்த 10-ம் தேதி டெல்லி வந்த ஆஃப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தாகி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தொடர்ந்து அந்தச் சந்திப்பு தொடர்பாக இரு நாடுகளின் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு வலுவான கண்டனங்களை பதிவு செய்த ஆஃப்கானிஸ்தானுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்திருந்தார்.

மேலும், இந்தியா – ஆஃப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிரான இணைந்த நிலைபாட்டை கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதேபோல, ஆஃப்கான் அமைச்சர் முத்தாகியும் ஆஃப்கானிஸ்தானின் நிலம் எந்த நாட்டிற்கும் எதிராகச் செயல்படாது என்றும், 40 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதே தங்கள் நாடு அமைதி மற்றும் முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டிருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் பகுதி என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அது ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களுக்கு முரணானனது எனக்கூறி பாகிஸ்தான் செய்வதறியாது புலம்பத் தொடங்கியுள்ளது. அதேபோல, பயங்கரவாதம் பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்னை எனக் குறிப்பிட்டிருந்த ஆஃப்கானிஸ்தான் அமைச்சரின் கருத்துக்கும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பான தங்களின் கவலைகளை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் பகிர்ந்துள்ளதாகவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஃப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், இந்தியா – ஆப்கன் அரசுகள் உயர்மட்ட சந்திப்பில் ஈடுபடுவது இதுவே முதல் முறை.

இந்தச் சந்திப்பின் மூலம் இந்தியா – ஆஃப்கானிஸ்தான் உறவுகள் புதிய திசையில் நகர வாய்ப்புள்ளது என்றாலும், மற்றொரு புறம் பாகிஸ்தானின் எதிர்ப்பால் பிராந்திய அளவிலான பிரச்னைகள் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்றும் புவிசார் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags: IndiapakistanafganistanNew relationship blossoming between India and Afghanistan: Joint statement that soured Pakistan's stomach!
ShareTweetSendShare
Previous Post

விவாதத்தை கிளப்பிய பிரபல டிவி நிகழ்ச்சி – கற்பித்தலில் குறைபாடா? பெற்றோர் வளர்ப்பா? – குறை எங்கு உள்ளது?

Next Post

பாக்.,கை தாலிபான்கள் பந்தாடும் பின்னணி : இந்தியா நிலைப்பாடு என்ன?

Related News

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies