பிரபாகரனின் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அதிமுக, கரூர் சம்பவத்தில்
மோசடியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்ற கருத்தைத் திணிக்க திமுக வழக்கறிஞர் வில்சன் முயல்வதாகக் குற்றம்சாட்டியுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பையே விஞ்ஞான ஊழல் தந்திரத்தால் திரித்துப் பேசி எதை மறைக்க முனைகிறீர்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. திமுக ஆட்சி செய்தால், நீதியே அவர்களுடன் போர் செய்ய வேண்டிய நிலை உள்ளதாகவும், பிரபாகரன் மீது சிறு கீறல் விழுந்தால் கூட அதற்குத் திமுக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் எனவும் அதிமுக கூறியுள்ளது.